Newsவிமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

விமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலைத்திருக்கக்கூடிய விமானப் போக்குவரத்து எரிபொருள் துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, 200 மில்லியன் டொலர் வரையிலான முதலீட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. Qantas, Airbus விமான நிறுவனங்கள் தங்களது பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை முடுக்கிவிட முற்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிதி புதிய நிறுவனங்களுக்கும் வெற்றிகரமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிபொருள் துறையின் ஆகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தவாறே முதலீடு செய்வது சிறந்த முடிவு என்று Qantas நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏனைய நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் தங்களது பசுமையான எரிபொருள் திட்டங்களோடு முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றாகக் குறைக்க உலகின் விமானத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய விமான எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அந்தக் கடப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்று Airbus விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம், ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...