Newsவிமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

விமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலைத்திருக்கக்கூடிய விமானப் போக்குவரத்து எரிபொருள் துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, 200 மில்லியன் டொலர் வரையிலான முதலீட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. Qantas, Airbus விமான நிறுவனங்கள் தங்களது பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை முடுக்கிவிட முற்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிதி புதிய நிறுவனங்களுக்கும் வெற்றிகரமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிபொருள் துறையின் ஆகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தவாறே முதலீடு செய்வது சிறந்த முடிவு என்று Qantas நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏனைய நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் தங்களது பசுமையான எரிபொருள் திட்டங்களோடு முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றாகக் குறைக்க உலகின் விமானத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய விமான எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அந்தக் கடப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்று Airbus விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம், ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...