Newsஇலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

-

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 ஆஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 ஆஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...