Newsஇலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

-

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 ஆஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 ஆஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...