Newsஇலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

-

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 ஆஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 ஆஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் Blueberry மற்றும் Strawberry பிரியர்களுக்கு சோகமான செய்தி

இந்த ஆண்டின் பெரும்பகுதிக்கு Blueberry விலைகள் அதிகமாகவே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் பெய்த கனமழை, பருவகால பற்றாக்குறை மற்றும்...

HIV சிகிச்சையில் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் ஒரு அரிய கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, HIV சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. HIV பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை அணுக்களுக்குள் இந்த...

WA இல் பொது விடுமுறை நாட்கள் மாற்றப்படலாம் – பிரதமர் Roger Cook

மேற்கு ஆஸ்திரேலியா (WA) மக்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக, கிழக்கு கடற்கரையில் அரசு விடுமுறை முறையுடன் தன்னை...

ஆஸ்திரிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி உட்பட 10 பேர் பலி

தென்கிழக்கு ஆஸ்திரிய நகரமான Graz-இல் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரிய...

பிரிஸ்பேர்ண் வழியாக கடத்தப்பட்ட 250 கிலோவிற்கும் அதிகமான கோகைன்

பிரிஸ்பேர்ணுக்கு ஒரு கப்பல் கொள்கலனில் கடத்தப்பட்ட 82 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பெரிய அளவிலான கோகோயின் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான கொள்கலன் இறக்குமதி செய்யப்படுவதாக...

பெர்த் முழுவதும் கசிந்த கழிவுநீர் – சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

பெர்த்தின் தெற்கில் உள்ள பல புறநகர்ப் பகுதிகளில் ஒரு பெரிய கழிவுநீர்க் கசிவைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது . ஸ்பியர்வுட்டில் முதல் குழாய் வெடித்து ஐந்து நாட்கள்...