Newsஇலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

-

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 ஆஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 ஆஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...