Newsஇலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை அறிவித்த ஆஸ்திரேலிய வங்கி

-

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 ஆஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல்தேசிய வங்கிகளில் ஒன்றான இந்த கொமன்வெல்த் வங்கி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இவ்விடயம் தொடர்பில் கொமன்வெல்த் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு நபரேனும் எமது வங்கியின் ஊடாக இலங்கையிலுள்ள தமது நண்பருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ பணம் அனுப்பும் பட்சத்தில், அப்பணவனுப்பலுக்கான கட்டணத்தில் 6 ஆஸ்திரேலிய டொலர்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தச் சலுகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது.

Latest news

விக்டோரியா மாநில பட்ஜெட் – வழங்கப்படவுள்ள பல நிவாரணங்கள்

விக்டோரியாவின் முதல் பெண் பொருளாளர், ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் "பொறுப்பான" முதல் பட்ஜெட்டை வழங்கியுள்ளார். வாழ்க்கைச் செலவு...

காஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர்

'நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...