Sportsஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 30 வருடங்களின் பின்னர் இலங்கை அணி சாதனை!

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 30 வருடங்களின் பின்னர் இலங்கை அணி சாதனை!

-

ஆஸ்திரேலியா அணியுடனான 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

5 போட்டிகளை கொண்ட தொடரின் 4 ஆவது போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

30 வருடங்களில் பின்னர் இலங்கை மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...