Newsஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

-

ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் பெண் ஒருவர் வீடியோ அழைப்பில் ஈடுபட்ட போது கையடக்க தொலைபேசி சார்ஜர் வெடித்ததில் முதல் மற்றும் இரண்டாவது டிகிரி தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளது.

கையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்துகொண்டே வீடியோ அழைப்பில் இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி சார்ஜரைப் பயன்படுத்தும் போது தீப்பிடித்ததில், கைகளில் முதல் மற்றும் இரண்டாம் டிகிரி தீக்காயங்களுக்குள்ளானார்.

லியாங் என்னும் அப்பெண், நண்பர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் இருந்தபோது, தொலைபேசியின் பேட்டரி குறைவாக இருந்ததால், போனை சார்ஜரில் சொருகி சோபாவில் வைத்துள்ளார்.

அப்போது சார்ஜர் திடீரென்று வெடித்து தீப்பிடித்தள்ளது. இதனால் தன் முழுக்கை மேலாடை மற்றும் ஸ்வெட்டரால் தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

மேலும் போர்வையை பயன்படுத்தி சார்ஜரையும் மூடியுள்ளார். பின்னர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

தீயின் வேகம் சற்றும் குறையாததால் குளியலறைக்குள் மொத்தமாக வீசி தீயை முழுவதுமாக அணைத்துள்ளார்.

தீயை அணைத்த பின்னர் தனது கைகளில் பெரிய கொப்புளங்களைக் கவனித்தார். அவரது மகள் முதலுதவியாக கையில் களிம்பு தடவி விட்டார், மறுநாள் காலையில் தான் மருத்துவ உதவியை நாடி மருத்துவமனை விரைந்துள்ளார்.

மேலும் இந்த சார்ஜர் நண்பர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...