Newsஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

-

ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் பெண் ஒருவர் வீடியோ அழைப்பில் ஈடுபட்ட போது கையடக்க தொலைபேசி சார்ஜர் வெடித்ததில் முதல் மற்றும் இரண்டாவது டிகிரி தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளது.

கையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்துகொண்டே வீடியோ அழைப்பில் இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி சார்ஜரைப் பயன்படுத்தும் போது தீப்பிடித்ததில், கைகளில் முதல் மற்றும் இரண்டாம் டிகிரி தீக்காயங்களுக்குள்ளானார்.

லியாங் என்னும் அப்பெண், நண்பர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் இருந்தபோது, தொலைபேசியின் பேட்டரி குறைவாக இருந்ததால், போனை சார்ஜரில் சொருகி சோபாவில் வைத்துள்ளார்.

அப்போது சார்ஜர் திடீரென்று வெடித்து தீப்பிடித்தள்ளது. இதனால் தன் முழுக்கை மேலாடை மற்றும் ஸ்வெட்டரால் தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

மேலும் போர்வையை பயன்படுத்தி சார்ஜரையும் மூடியுள்ளார். பின்னர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

தீயின் வேகம் சற்றும் குறையாததால் குளியலறைக்குள் மொத்தமாக வீசி தீயை முழுவதுமாக அணைத்துள்ளார்.

தீயை அணைத்த பின்னர் தனது கைகளில் பெரிய கொப்புளங்களைக் கவனித்தார். அவரது மகள் முதலுதவியாக கையில் களிம்பு தடவி விட்டார், மறுநாள் காலையில் தான் மருத்துவ உதவியை நாடி மருத்துவமனை விரைந்துள்ளார்.

மேலும் இந்த சார்ஜர் நண்பர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

14-மணிநேர Optus செயலிழப்பிற்கு பண இழப்பீடு வழங்க முடிவு

கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட சேவைத் தோல்வியால் சிரமத்துக்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளதாக Optus Communications...

ஓய்வூதிய பலன் தாமதங்கள் குறித்த செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்த செனட் நகர்ந்துள்ளது. குறிப்பாக பழைய கருணைத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை செலுத்தாதது தொடர்பான புகார்களின்...

9/10 ஆஸ்திரேலியர்கள் பூர்வீக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறுகிறார்கள்

பழங்குடியின மக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 10...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த ஊதிய உயர்வு உள்ள துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பள அதிகரிப்புகளை கொண்ட துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் சம்பளம் 08...