News ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

-

ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் பெண் ஒருவர் வீடியோ அழைப்பில் ஈடுபட்ட போது கையடக்க தொலைபேசி சார்ஜர் வெடித்ததில் முதல் மற்றும் இரண்டாவது டிகிரி தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளது.

கையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்துகொண்டே வீடியோ அழைப்பில் இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி சார்ஜரைப் பயன்படுத்தும் போது தீப்பிடித்ததில், கைகளில் முதல் மற்றும் இரண்டாம் டிகிரி தீக்காயங்களுக்குள்ளானார்.

லியாங் என்னும் அப்பெண், நண்பர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் இருந்தபோது, தொலைபேசியின் பேட்டரி குறைவாக இருந்ததால், போனை சார்ஜரில் சொருகி சோபாவில் வைத்துள்ளார்.

அப்போது சார்ஜர் திடீரென்று வெடித்து தீப்பிடித்தள்ளது. இதனால் தன் முழுக்கை மேலாடை மற்றும் ஸ்வெட்டரால் தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

மேலும் போர்வையை பயன்படுத்தி சார்ஜரையும் மூடியுள்ளார். பின்னர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

தீயின் வேகம் சற்றும் குறையாததால் குளியலறைக்குள் மொத்தமாக வீசி தீயை முழுவதுமாக அணைத்துள்ளார்.

தீயை அணைத்த பின்னர் தனது கைகளில் பெரிய கொப்புளங்களைக் கவனித்தார். அவரது மகள் முதலுதவியாக கையில் களிம்பு தடவி விட்டார், மறுநாள் காலையில் தான் மருத்துவ உதவியை நாடி மருத்துவமனை விரைந்துள்ளார்.

மேலும் இந்த சார்ஜர் நண்பர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.