Newsபாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பேச்சுவர்த்தை

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பேச்சுவர்த்தை

-

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவர்த்தை நடத்தினர்.

கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கிடையே இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது குறித்தும் மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு பணிக்குழுவை நிறைவேற்றுவதற்கு இருதரப்பும் உறுதி பூண்டனர்.

கடந்த மாதம் இரு நாட்டு பிரதமர்கள் இடையே நடைபெற்ற காணொலி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட “ஜெனரல் ராவத் இளைய அதிகாரிகள் பரிமாற்று திட்டத்தை” தொடங்குவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

Latest news

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

ரஷ்யாவை அணு ஆயுதப் போருக்கு அச்சுறுத்துகிறார் டொனால்ட் ட்ரம்ப்

ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா அருகே நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள்...

விக்டோரியா ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்!

விக்டோரியன் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது வீட்டிலிருந்து வேலை செய்யும் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையிலான ஆலன் தொழிலாளர்...

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக Microsoft தெரிவு

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க 50 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஜூலை 18, 2025 நிலவரப்படி, உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக Nvidia பெயரிடப்பட்டுள்ளது. அதன் சந்தை...

படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி காவலில் இருந்து தப்பித்த வெளிநாட்டவர்

காவலில் இருந்து தப்பிக்க படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தியதாக ஐரிஷ் நாட்டவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்தார். மேலும் Biometric...