Newsஆஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

ஆஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

-

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்துள்ளார்.

அதற்காக தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் நடைமுறையில் வைத்திருப்பது அவசியமானது என அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் எல்லைக் கொள்கை மாறவில்லை என தொழிற்கட்சி அரசாங்கம் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.

“தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு முடிவுக் கட்டுவோம் எனத் தொழிற்கட்சி தெளிவாக தெரிவித்துள்ளதால் எதுவும் மாறவில்லை எனத் தொழிற்கட்சியால் சொல்ல முடியாது,” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் விமர்சித்திருக்கிறார்.

தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் என்பது எல்லைகள் இறைமை நடவடிக்கையின் (Operation Sovereign Borders) முக்கியமான அங்கம் என கரேன் ஆண்டூருஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...