Newsஇலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

-

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பாடசாலைகளில், போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஊடாக, அந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து, பொறுத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும்.

அதேநேரம், கடந்த வாரம் பாடசாலைகள் இயங்காத நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை 3 நாட்களுக்கு இயக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் குறித்த பாடசாலைகள் இயங்க வேண்டும்.

அந்தப் பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கும் நாட்கள் குறித்து, தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில், வீட்டுப் பாடங்களை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் ஊடாக கற்பித்தல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்காக, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...