Newsதேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

-

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ‘Varroa Mite’ ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் ‘Varroa Mite’ ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது.

அதையடுத்து கடுமையான உயிரியல் பாதுகாப்புப் பகுதி ஒன்றை அதிகாரிகள் உருவாக்கினர். அதன்படி, அந்த 50-கிலோமீட்டர் பகுதிக்குள் உள்ள தேனீக்கள், தேன்கூடுகள் ஆகியவற்றை நகர்த்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

‘Varroa Mite’ ஒட்டுண்ணி தேனீக்களை அழித்து நாட்டின் தேன் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். அதனால் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்று ஆஸ்திரேலியத் தேனீத் தொழில்துறை மன்றம் தெரிவித்துள்ளது.

ஒட்டுண்ணியை முழுமையாக ஒழிப்பதற்காக அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநில முதன்மைத் தொழில்துறைகளின் பிரிவும் கூறியுள்ளது. தேன் உற்பத்தி தவிர, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் தேனீக்கள் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...