News தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

-

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ‘Varroa Mite’ ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் ‘Varroa Mite’ ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது.

அதையடுத்து கடுமையான உயிரியல் பாதுகாப்புப் பகுதி ஒன்றை அதிகாரிகள் உருவாக்கினர். அதன்படி, அந்த 50-கிலோமீட்டர் பகுதிக்குள் உள்ள தேனீக்கள், தேன்கூடுகள் ஆகியவற்றை நகர்த்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

‘Varroa Mite’ ஒட்டுண்ணி தேனீக்களை அழித்து நாட்டின் தேன் உற்பத்தியைப் பாதிக்கக்கூடும். அதனால் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்று ஆஸ்திரேலியத் தேனீத் தொழில்துறை மன்றம் தெரிவித்துள்ளது.

ஒட்டுண்ணியை முழுமையாக ஒழிப்பதற்காக அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநில முதன்மைத் தொழில்துறைகளின் பிரிவும் கூறியுள்ளது. தேன் உற்பத்தி தவிர, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் தேனீக்கள் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...