Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று - சுகாதார பிரிவு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று – சுகாதார பிரிவு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் புதிதாக கொரோனா அலை எழுவது குறித்து அந்நகர சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் மற்றொரு கொரோனா தொற்று அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரேச்சல் ஸ்டீஃபன் ஸ்மித் நேற்று குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் கொரோனாவுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவமனைகளில் கொவிட்-19க்காக 121 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இதுவே ஆக அதிகம்.

கேன்பெரா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டிருப்பதே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று அரசாங்கம் கூறியது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...