Newsஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள்...

ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள் இன்று!

-

ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை , கட்டுரை , நாடகம் என பல்துறைசார் பங்களிப்பை வழங்கிய இவர் , இலங்கை தமிழ் நாடகத்துறை வரலாற்றில் பெரும் தடம் பதித்தவர். மொரட்டுவ பொறியியல் பீடத்தில் படித்த போது , ‘நுட்பம்’ எனும் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் இதழுக்கு உருக்கொடுத்தவர்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் கலையாக்க பணியைக் குறைத்து, தமிழ் ஊட்டலுக்காய் பாரதி பள்ளி அமைத்து மூன்று தசாப்தங்களாய் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பவர். ஒரு நாடகக் கலைஞனாய், பல சிறுவர் நாடகங்களை உருவாக்கி மேடையேற்றிக் கொண்டிருப்பவர்.

தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இங்கிருக்கும் தமிழ்ப் பணியோடு , தாயகத்தில் ‘தற்கொலை தடுப்பு’, இயற்கை முறைப் பயிர்ச் செய்கை’ என பல செயற்திட்டங்களை சமூகத்துக்கு நன்மைபயக்கும் வகையில் முனைப்புடன் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.

அர்ப்பணிப்பின் அர்த்தமாய் – பல்துறைசார் ஆளுமையாய் – இங்கு தமிழ் பேசும் தலைமுறைகளின் உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராய் விளங்கும் இவர் , இன்னும் பல ஆண்டுகள் நலமாய் வாழ்ந்து தன் பணி தொடரவேண்டும்.

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...