Newsஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

-

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்கு 12 மில்லியன் டொலர் சொத்தை தனது மகளுக்கு எழுதி வைத்துள்ளார்.

சொத்து முழுவதும் மகளுக்குதான். ஆனால், அதை அடையும் முன் தன் மகள் ஒரு நிரந்தர வேலையில் சேரவேண்டும் என்று கூறி இறந்து விட்டார். பார்க்க மிக எளிதான வேலை போல இது தோன்றினாலும் அவர் மகளுக்கு இது மிக கடினமானது.

ஏனெனில் அவர் மகளுக்கு ADHD என்ற கவனக்குறைவு மற்றும் ’ஹைப்பர் ஹேக்டிவிட்டி’ பிரச்சனை இருக்கிறது. இந்த குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேலையை கவனமாக செய்ய முடியாது. இதன் காரணமாக நிரந்தர வேலை இவர்களுக்கு கிடைப்பது அரிது. இதனால் கோடிஸ்வரரின் மகள் பல இடங்களில் அலைந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தந்தையின் இந்த முடிவை எதிர்த்து அவரது மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேலைக்காக அனைத்து முயற்சியும் எடுத்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் தனது தந்தை இறப்பதற்கு முன்பு வரை வாரம் பணம் கொடுத்ததாகவும், அதையும் அவர் பல நேரங்களில் சரியாக தராமல் ஏமாற்றி தன்னை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நீதிமன்றம் தனக்கு உரிய நீதியை பெற்றுத்தரும் என்றும் கூறியுள்ளார்.

கிளாரா என்று பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...