Newsஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

-

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்கு 12 மில்லியன் டொலர் சொத்தை தனது மகளுக்கு எழுதி வைத்துள்ளார்.

சொத்து முழுவதும் மகளுக்குதான். ஆனால், அதை அடையும் முன் தன் மகள் ஒரு நிரந்தர வேலையில் சேரவேண்டும் என்று கூறி இறந்து விட்டார். பார்க்க மிக எளிதான வேலை போல இது தோன்றினாலும் அவர் மகளுக்கு இது மிக கடினமானது.

ஏனெனில் அவர் மகளுக்கு ADHD என்ற கவனக்குறைவு மற்றும் ’ஹைப்பர் ஹேக்டிவிட்டி’ பிரச்சனை இருக்கிறது. இந்த குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேலையை கவனமாக செய்ய முடியாது. இதன் காரணமாக நிரந்தர வேலை இவர்களுக்கு கிடைப்பது அரிது. இதனால் கோடிஸ்வரரின் மகள் பல இடங்களில் அலைந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தந்தையின் இந்த முடிவை எதிர்த்து அவரது மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேலைக்காக அனைத்து முயற்சியும் எடுத்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் தனது தந்தை இறப்பதற்கு முன்பு வரை வாரம் பணம் கொடுத்ததாகவும், அதையும் அவர் பல நேரங்களில் சரியாக தராமல் ஏமாற்றி தன்னை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நீதிமன்றம் தனக்கு உரிய நீதியை பெற்றுத்தரும் என்றும் கூறியுள்ளார்.

கிளாரா என்று பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...

மீண்டும் மோசமடைந்து வரும் Bondi நாயகனின் உடல்நிலை

Bondi ஹீரோ அகமது அல்-அஹ்மத் அமெரிக்காவில் மீண்டும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும், பல கௌரவ விருது விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் நியூயார்க்கிற்குச்...

காவல்துறையினரைத் தாக்கியதற்காக இளைஞர் ஒருவர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Bawley கடற்கரையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்திய 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் நிர்வாணமாக...

காவல்துறையினரைத் தாக்கியதற்காக இளைஞர் ஒருவர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Bawley கடற்கரையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்திய 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் நிர்வாணமாக...

மெல்பேர்ண் மைதானத்தில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்த மரம்

மெல்பேர்ணில் உள்ள Gracedale பூங்காவில் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது குடும்பத்தினருடன் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மரம் முறிந்து விழுந்ததில் 90...