Newsஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவில் திரைப்பட பாணியில் மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி!

-

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்கு 12 மில்லியன் டொலர் சொத்தை தனது மகளுக்கு எழுதி வைத்துள்ளார்.

சொத்து முழுவதும் மகளுக்குதான். ஆனால், அதை அடையும் முன் தன் மகள் ஒரு நிரந்தர வேலையில் சேரவேண்டும் என்று கூறி இறந்து விட்டார். பார்க்க மிக எளிதான வேலை போல இது தோன்றினாலும் அவர் மகளுக்கு இது மிக கடினமானது.

ஏனெனில் அவர் மகளுக்கு ADHD என்ற கவனக்குறைவு மற்றும் ’ஹைப்பர் ஹேக்டிவிட்டி’ பிரச்சனை இருக்கிறது. இந்த குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேலையை கவனமாக செய்ய முடியாது. இதன் காரணமாக நிரந்தர வேலை இவர்களுக்கு கிடைப்பது அரிது. இதனால் கோடிஸ்வரரின் மகள் பல இடங்களில் அலைந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தந்தையின் இந்த முடிவை எதிர்த்து அவரது மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேலைக்காக அனைத்து முயற்சியும் எடுத்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் தனது தந்தை இறப்பதற்கு முன்பு வரை வாரம் பணம் கொடுத்ததாகவும், அதையும் அவர் பல நேரங்களில் சரியாக தராமல் ஏமாற்றி தன்னை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நீதிமன்றம் தனக்கு உரிய நீதியை பெற்றுத்தரும் என்றும் கூறியுள்ளார்.

கிளாரா என்று பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...