Newsஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள்...

ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள் இன்று!

-

ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை , கட்டுரை , நாடகம் என பல்துறைசார் பங்களிப்பை வழங்கிய இவர் , இலங்கை தமிழ் நாடகத்துறை வரலாற்றில் பெரும் தடம் பதித்தவர். மொரட்டுவ பொறியியல் பீடத்தில் படித்த போது , ‘நுட்பம்’ எனும் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் இதழுக்கு உருக்கொடுத்தவர்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் கலையாக்க பணியைக் குறைத்து, தமிழ் ஊட்டலுக்காய் பாரதி பள்ளி அமைத்து மூன்று தசாப்தங்களாய் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பவர். ஒரு நாடகக் கலைஞனாய், பல சிறுவர் நாடகங்களை உருவாக்கி மேடையேற்றிக் கொண்டிருப்பவர்.

தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இங்கிருக்கும் தமிழ்ப் பணியோடு , தாயகத்தில் ‘தற்கொலை தடுப்பு’, இயற்கை முறைப் பயிர்ச் செய்கை’ என பல செயற்திட்டங்களை சமூகத்துக்கு நன்மைபயக்கும் வகையில் முனைப்புடன் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.

அர்ப்பணிப்பின் அர்த்தமாய் – பல்துறைசார் ஆளுமையாய் – இங்கு தமிழ் பேசும் தலைமுறைகளின் உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராய் விளங்கும் இவர் , இன்னும் பல ஆண்டுகள் நலமாய் வாழ்ந்து தன் பணி தொடரவேண்டும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...