Newsஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள்...

ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள் இன்று!

-

ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை , கட்டுரை , நாடகம் என பல்துறைசார் பங்களிப்பை வழங்கிய இவர் , இலங்கை தமிழ் நாடகத்துறை வரலாற்றில் பெரும் தடம் பதித்தவர். மொரட்டுவ பொறியியல் பீடத்தில் படித்த போது , ‘நுட்பம்’ எனும் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் இதழுக்கு உருக்கொடுத்தவர்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் கலையாக்க பணியைக் குறைத்து, தமிழ் ஊட்டலுக்காய் பாரதி பள்ளி அமைத்து மூன்று தசாப்தங்களாய் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பவர். ஒரு நாடகக் கலைஞனாய், பல சிறுவர் நாடகங்களை உருவாக்கி மேடையேற்றிக் கொண்டிருப்பவர்.

தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இங்கிருக்கும் தமிழ்ப் பணியோடு , தாயகத்தில் ‘தற்கொலை தடுப்பு’, இயற்கை முறைப் பயிர்ச் செய்கை’ என பல செயற்திட்டங்களை சமூகத்துக்கு நன்மைபயக்கும் வகையில் முனைப்புடன் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.

அர்ப்பணிப்பின் அர்த்தமாய் – பல்துறைசார் ஆளுமையாய் – இங்கு தமிழ் பேசும் தலைமுறைகளின் உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராய் விளங்கும் இவர் , இன்னும் பல ஆண்டுகள் நலமாய் வாழ்ந்து தன் பணி தொடரவேண்டும்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...