Newsஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள்...

ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள் இன்று!

-

ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை , கட்டுரை , நாடகம் என பல்துறைசார் பங்களிப்பை வழங்கிய இவர் , இலங்கை தமிழ் நாடகத்துறை வரலாற்றில் பெரும் தடம் பதித்தவர். மொரட்டுவ பொறியியல் பீடத்தில் படித்த போது , ‘நுட்பம்’ எனும் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் இதழுக்கு உருக்கொடுத்தவர்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் கலையாக்க பணியைக் குறைத்து, தமிழ் ஊட்டலுக்காய் பாரதி பள்ளி அமைத்து மூன்று தசாப்தங்களாய் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பவர். ஒரு நாடகக் கலைஞனாய், பல சிறுவர் நாடகங்களை உருவாக்கி மேடையேற்றிக் கொண்டிருப்பவர்.

தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இங்கிருக்கும் தமிழ்ப் பணியோடு , தாயகத்தில் ‘தற்கொலை தடுப்பு’, இயற்கை முறைப் பயிர்ச் செய்கை’ என பல செயற்திட்டங்களை சமூகத்துக்கு நன்மைபயக்கும் வகையில் முனைப்புடன் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.

அர்ப்பணிப்பின் அர்த்தமாய் – பல்துறைசார் ஆளுமையாய் – இங்கு தமிழ் பேசும் தலைமுறைகளின் உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராய் விளங்கும் இவர் , இன்னும் பல ஆண்டுகள் நலமாய் வாழ்ந்து தன் பணி தொடரவேண்டும்.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...