Newsஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள்...

ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள் இன்று!

-

ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை , கட்டுரை , நாடகம் என பல்துறைசார் பங்களிப்பை வழங்கிய இவர் , இலங்கை தமிழ் நாடகத்துறை வரலாற்றில் பெரும் தடம் பதித்தவர். மொரட்டுவ பொறியியல் பீடத்தில் படித்த போது , ‘நுட்பம்’ எனும் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் இதழுக்கு உருக்கொடுத்தவர்களில் ஒருவர்.

ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் கலையாக்க பணியைக் குறைத்து, தமிழ் ஊட்டலுக்காய் பாரதி பள்ளி அமைத்து மூன்று தசாப்தங்களாய் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பவர். ஒரு நாடகக் கலைஞனாய், பல சிறுவர் நாடகங்களை உருவாக்கி மேடையேற்றிக் கொண்டிருப்பவர்.

தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இங்கிருக்கும் தமிழ்ப் பணியோடு , தாயகத்தில் ‘தற்கொலை தடுப்பு’, இயற்கை முறைப் பயிர்ச் செய்கை’ என பல செயற்திட்டங்களை சமூகத்துக்கு நன்மைபயக்கும் வகையில் முனைப்புடன் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.

அர்ப்பணிப்பின் அர்த்தமாய் – பல்துறைசார் ஆளுமையாய் – இங்கு தமிழ் பேசும் தலைமுறைகளின் உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராய் விளங்கும் இவர் , இன்னும் பல ஆண்டுகள் நலமாய் வாழ்ந்து தன் பணி தொடரவேண்டும்.

Latest news

நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள பணியிடத் தொழிலாளர்கள்

செயற்கைக் கல் பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதுபோன்ற சூழல்களில் பணிபுரியும் ஐந்து...

வேலைநிறுத்தம் செய்ய உள்ள குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 48,000 ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். குயின்ஸ்லாந்தின் 1266 அரசுப் பள்ளிகள் மற்றும் 560,000...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாயின் அளவுள்ள எலி

ஆஸ்திரேலியாவின் Normanby-இல் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. மேலும் இந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட iPhone” – டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான சமீபத்திய iPhone-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்று Apple தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகிறார். நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையை வெளியிடுவதற்காக நடைபெற்ற...