Newsஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் - நெருக்கடியில் பல்வேறு துறையினர்

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் – நெருக்கடியில் பல்வேறு துறையினர்

-

ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 480,000 பணி வெற்றிடங்கள் உள்ளதென புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 58,000 வெற்றிடங்கள் அதிகமாகும்.

2020 ஆண்டு பெப்ரவரி புள்ளிவிவர பகுப்பாய்வுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மே மாதத்தில் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் தொடக்கத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு வெற்றிடமாக இருப்பதாகக் கூறிய வணிகங்களின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பலர் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சில பணியிடங்கள் திருப்திகரமாக நிரப்பப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மாநில வாரியாக, விக்டோரியாவில் அதிகபட்சமாக 18 சதவீத வெற்றிடங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான வேலை வெற்றிடங்கள் சில்லறை வர்த்தகத் துறையிலேயே (38 சதவீதம்) உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...