Newsஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன.

இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது படகொன்றுடன் குறித்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானாவர்களில் கடத்தல்காரர்கள் 6 பேர் உட்பட 41 ஆண்களும், 5 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...