Newsஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன.

இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது படகொன்றுடன் குறித்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானாவர்களில் கடத்தல்காரர்கள் 6 பேர் உட்பட 41 ஆண்களும், 5 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...