Newsஜனாதிபதி செயலகத்தை தாக்க பெற்றோல் குண்டுகள் தயாரிக்கும் போராட்டக்காரர்கள் - அதிர்ச்சி...

ஜனாதிபதி செயலகத்தை தாக்க பெற்றோல் குண்டுகள் தயாரிக்கும் போராட்டக்காரர்கள் – அதிர்ச்சி தகவல்

-

இலங்கை ஜனாதிபதி தலைவரின் செயலகத்தை தாக்குவதற்கு பெற்றோல் குண்டுகளை தயாரிக்கும் செய்முறைகளை போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர் என்று சிங்கள இணையத்தளம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவரின் செயலகத்தை எதிர்வரும் 9 ஆம் நாள் போராட்டத்தினை நடத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

இது போராட்டக்காரர்களின் உண்மையான காணொளியா அல்லது சில குழுவினரால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும், எதிர்வரும் 9 நாள் கொழும்புக்கு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு அரச தலைலவரின் மாளிகையை தாக்கி அதனை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த காணொளியில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெற்றோல் குண்டுகளை தயாரிப்பதற்கான செய்முறைகளையும் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளதாக என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...