News எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை கட்டிய விவசாயி!

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை கட்டிய விவசாயி!

-

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக ‘லங்காதீப’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தம்புள்ளையில் உள்ள அதுபாறை பிரதேசத்தில் வசிக்கும் இளம் விவசாயியும் பால் பண்ணையாளருமான ஆர்.எம்.ரத்நாயக்க 50 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார்.

தம்புள்ளை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்கு காத்திருந்தோர் வரிசையில் தனது தேவைகளுக்கும் மாடுகளின் தேவைகளுக்குமாக கறவை மாட்டின் பின்புறத்தில் தனது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை எழுதி விட்டுள்ளார்.

பெற்றோலினை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களாக வரிசையில் நின்றதாகவும், ஆனால் பெற்றோலினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை தொடர்பாக பிரதேச செயலாளர், காவல்துறையினர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு அவர் அறிவித்துள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...