Newsஎரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை கட்டிய விவசாயி!

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை கட்டிய விவசாயி!

-

எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக ‘லங்காதீப’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தம்புள்ளையில் உள்ள அதுபாறை பிரதேசத்தில் வசிக்கும் இளம் விவசாயியும் பால் பண்ணையாளருமான ஆர்.எம்.ரத்நாயக்க 50 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார்.

தம்புள்ளை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்கு காத்திருந்தோர் வரிசையில் தனது தேவைகளுக்கும் மாடுகளின் தேவைகளுக்குமாக கறவை மாட்டின் பின்புறத்தில் தனது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை எழுதி விட்டுள்ளார்.

பெற்றோலினை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களாக வரிசையில் நின்றதாகவும், ஆனால் பெற்றோலினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை தொடர்பாக பிரதேச செயலாளர், காவல்துறையினர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு அவர் அறிவித்துள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...