Newsஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா - வெளியான பரபரப்பு தகவல்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா – வெளியான பரபரப்பு தகவல்

-

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை சனிக்கிழமை (09.07.2022) நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் இலக்கு அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு, அரச தலைவர் மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை நடத்துவதே என்று உளவுத்துறை உறுதிப்படுத்தியதனையடுத்து, பாதுகாப்பு உத்தியாக அரச தலைவர் மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கொழும்பை பாதுகாப்பதற்காக வரலாற்றில் மிகப்பெரிய காவல்துறை படை குவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான இராணுவத்தினரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கமும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் காவல்துறையின் தலையீடு இருக்காது என்று காவல்துறை மா அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதனை தடுக்குமாறு கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...