Newsஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா - வெளியான பரபரப்பு தகவல்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா – வெளியான பரபரப்பு தகவல்

-

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை சனிக்கிழமை (09.07.2022) நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் இலக்கு அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு, அரச தலைவர் மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை நடத்துவதே என்று உளவுத்துறை உறுதிப்படுத்தியதனையடுத்து, பாதுகாப்பு உத்தியாக அரச தலைவர் மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கொழும்பை பாதுகாப்பதற்காக வரலாற்றில் மிகப்பெரிய காவல்துறை படை குவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான இராணுவத்தினரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கமும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் காவல்துறையின் தலையீடு இருக்காது என்று காவல்துறை மா அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதனை தடுக்குமாறு கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...