Newsஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா - வெளியான பரபரப்பு தகவல்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா – வெளியான பரபரப்பு தகவல்

-

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை சனிக்கிழமை (09.07.2022) நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் இலக்கு அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு, அரச தலைவர் மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை நடத்துவதே என்று உளவுத்துறை உறுதிப்படுத்தியதனையடுத்து, பாதுகாப்பு உத்தியாக அரச தலைவர் மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கொழும்பை பாதுகாப்பதற்காக வரலாற்றில் மிகப்பெரிய காவல்துறை படை குவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான இராணுவத்தினரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கமும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் காவல்துறையின் தலையீடு இருக்காது என்று காவல்துறை மா அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதனை தடுக்குமாறு கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...