Newsஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா - வெளியான பரபரப்பு தகவல்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா – வெளியான பரபரப்பு தகவல்

-

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை சனிக்கிழமை (09.07.2022) நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் இலக்கு அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு, அரச தலைவர் மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை நடத்துவதே என்று உளவுத்துறை உறுதிப்படுத்தியதனையடுத்து, பாதுகாப்பு உத்தியாக அரச தலைவர் மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கொழும்பை பாதுகாப்பதற்காக வரலாற்றில் மிகப்பெரிய காவல்துறை படை குவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான இராணுவத்தினரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கமும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் காவல்துறையின் தலையீடு இருக்காது என்று காவல்துறை மா அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதனை தடுக்குமாறு கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரள்வு – 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா...

சீனாவில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கும் AI

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

சிட்னி புத்தாண்டு வாணவேடிக்கைக்கு பலத்த பாதுகாப்பு

சிட்னியின் அடையாள புத்தாண்டு கொண்டாட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. 2026 புத்தாண்டு கொண்டாட்டம், கண்கவர் வாணவேடிக்கையுடன் நடைபெறும் என்றும், Bondi பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து...