Newsஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா - வெளியான பரபரப்பு தகவல்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா – வெளியான பரபரப்பு தகவல்

-

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை சனிக்கிழமை (09.07.2022) நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் இலக்கு அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு, அரச தலைவர் மாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை நடத்துவதே என்று உளவுத்துறை உறுதிப்படுத்தியதனையடுத்து, பாதுகாப்பு உத்தியாக அரச தலைவர் மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கொழும்பை பாதுகாப்பதற்காக வரலாற்றில் மிகப்பெரிய காவல்துறை படை குவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான இராணுவத்தினரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

சட்டத்தரணிகள் சங்கமும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் காவல்துறையின் தலையீடு இருக்காது என்று காவல்துறை மா அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதனை தடுக்குமாறு கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...