Newsகோட்டா குழுவினரின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணம் வீணடிப்பு

கோட்டா குழுவினரின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணம் வீணடிப்பு

-

கோட்டா குழுவினர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கிலான பணத்தினை வீணடித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோட்டாபய, ரணில், மகிந்த ஆகியோர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பல சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்புக்கு காவல்துறையின் நீர்த்தாரகை பீரங்கி வரவழைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தொலை தூர இடங்களில் இருந்து வாகனங்களை கொண்டு வந்து வீணடிக்கும் விதம் குறித்து காவல்துறையினரிடம் கூட கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மேலதிக இராணுவ பாதுகாப்பை வழங்குவதற்காக விஜேராமவில் அமைந்துள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான இலக்கம் 117 கட்டடத்தை சிறிலங்கா கடற்படை அல்லது இராணுவத்தினரிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...

சீனாவின் எஃகுத் தொழிலுக்கு உதவ பிரதமர் அல்பானீஸ் பேச்சுவார்த்தை

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீனாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது நாள் நேற்று ஆகும். முன்னாள் Socceroos starஉம், சீன கிளப்பான ஷாங்காய் துறைமுகத்தின் தற்போதைய மேலாளருமான அவர்,...

ஊடகங்களில் வெளியான ஒரு ரகசிய அரசாங்க அறிக்கை

வரிகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து, நிதியமைச்சர் Jim Chalmers தற்செயலாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியதாக ஊடக அறிக்கைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்கம்...

உலக வல்லரசின் மீதான வரி உயர்வுக்குப் பிறகு டிரம்பை சந்திக்க ஆர்வமாக உள்ள ஆஸ்திரேலியா

மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது டிரம்ப் புதிய வரிகளை விதிக்கும்போது, அவருடன் அரசாங்கம் ஈடுபட முயற்சிப்பதாக கருவூல செயலாளர் Jim Chalmers அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்...

ஆசியாவின் வயதான யானை மரணம்

ஆசியாவின் வயதான யானையாகக் கருதப்படும் "வத்சலா" உயிரிழந்துள்ளது. வத்சலா இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். வத்சலாவின் இறுதிச் சடங்குகள் இந்தியாவின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள...