Newsபத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

பத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

-

கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் அனைத்துத்தரப்பினரும் இன்று சனிக்கிழமை பாரிய எழுச்சிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் அனைவரும் அரச தலைவர் மாளிகையினை முற்றுகையிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்லவில் உள்ள இராணுவ முகாமில் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்களத்தில் வெளிவரும் Youtube வலையமைப்பு இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வர்த்தக நகரான கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பத்தரமுல்ல அமைந்து உள்ளது. இது மத்திய பகுதியான புறக்கோட்டையில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...