Newsபத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

பத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

-

கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் அனைத்துத்தரப்பினரும் இன்று சனிக்கிழமை பாரிய எழுச்சிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் அனைவரும் அரச தலைவர் மாளிகையினை முற்றுகையிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்லவில் உள்ள இராணுவ முகாமில் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்களத்தில் வெளிவரும் Youtube வலையமைப்பு இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வர்த்தக நகரான கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பத்தரமுல்ல அமைந்து உள்ளது. இது மத்திய பகுதியான புறக்கோட்டையில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...