Newsபத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

பத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

-

கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் அனைத்துத்தரப்பினரும் இன்று சனிக்கிழமை பாரிய எழுச்சிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் அனைவரும் அரச தலைவர் மாளிகையினை முற்றுகையிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்லவில் உள்ள இராணுவ முகாமில் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்களத்தில் வெளிவரும் Youtube வலையமைப்பு இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வர்த்தக நகரான கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பத்தரமுல்ல அமைந்து உள்ளது. இது மத்திய பகுதியான புறக்கோட்டையில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...