Newsபத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

பத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

-

கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, ‘கோட்டா கோகம’ குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் அனைத்துத்தரப்பினரும் இன்று சனிக்கிழமை பாரிய எழுச்சிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் அனைவரும் அரச தலைவர் மாளிகையினை முற்றுகையிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்லவில் உள்ள இராணுவ முகாமில் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்களத்தில் வெளிவரும் Youtube வலையமைப்பு இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் வர்த்தக நகரான கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பத்தரமுல்ல அமைந்து உள்ளது. இது மத்திய பகுதியான புறக்கோட்டையில் இருந்து 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...