Newsஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

ஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

-

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணத்தை, அண்மைக்காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் காவல்துறை அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததையடுத்து, கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்ததாகக் கூறப்படும் அறையின் அலுமாரியில் இருந்து ஒரு கோடியே எழுபத்து எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கண்டெடுத்தது.

அந்தப் பணத்தை அரச தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் நிசேத பெர்னாண்டோ என்ற அதிகாரியிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக மாணவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு அவர் அந்தத் தொகையை ஏற்க மறுத்ததுடன், தலைமை காவல்துறை பரிசோதகர் சாகர லியனகேவுக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, சாகர லியனகே உள்ளிட்ட காவல்துறை குழுவினர் அங்கு சென்றனர். பணம் கிடைத்த இடத்தை காணொலியாக பதிவு செய்த காவல்துறையினர், ஐந்து மாணவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று பணத்தையும் தமது பொறுப்பில் எடுத்துச் சென்றனர்.

இந்த பணம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தனை நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் திடீரென கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து, காவல்துறை புத்தகத்தில் பதியாமல் அந்தப் பணத்தை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதனை கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி மறுத்ததாகவும் காவல்துறை உயரதிகாரியான “நான் சொன்னதைச் செய்” என்று அவரை மிரட்டியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த உயர் அதிகாரி அவ்வாறு உரையாடி மிரட்டியுள்ளதாக காவல்துறை குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், காவல்துறை தலைமையகத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் வெளியாட்கள் எவருக்கும் பணத்தை வழங்க வேண்டாம் என்று காவல்துறை தலைமையகத்தில் இருந்து கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...