Newsஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

ஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

-

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணத்தை, அண்மைக்காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் காவல்துறை அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததையடுத்து, கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்ததாகக் கூறப்படும் அறையின் அலுமாரியில் இருந்து ஒரு கோடியே எழுபத்து எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கண்டெடுத்தது.

அந்தப் பணத்தை அரச தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் நிசேத பெர்னாண்டோ என்ற அதிகாரியிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக மாணவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு அவர் அந்தத் தொகையை ஏற்க மறுத்ததுடன், தலைமை காவல்துறை பரிசோதகர் சாகர லியனகேவுக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, சாகர லியனகே உள்ளிட்ட காவல்துறை குழுவினர் அங்கு சென்றனர். பணம் கிடைத்த இடத்தை காணொலியாக பதிவு செய்த காவல்துறையினர், ஐந்து மாணவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று பணத்தையும் தமது பொறுப்பில் எடுத்துச் சென்றனர்.

இந்த பணம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தனை நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் திடீரென கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து, காவல்துறை புத்தகத்தில் பதியாமல் அந்தப் பணத்தை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதனை கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி மறுத்ததாகவும் காவல்துறை உயரதிகாரியான “நான் சொன்னதைச் செய்” என்று அவரை மிரட்டியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த உயர் அதிகாரி அவ்வாறு உரையாடி மிரட்டியுள்ளதாக காவல்துறை குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், காவல்துறை தலைமையகத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் வெளியாட்கள் எவருக்கும் பணத்தை வழங்க வேண்டாம் என்று காவல்துறை தலைமையகத்தில் இருந்து கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....