Newsஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

ஜனாதிபதி மாளிகை பணத்துக்காக மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய உயரதிகாரி

-

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணத்தை, அண்மைக்காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் காவல்துறை அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததையடுத்து, கோட்டாபய ராஜபக்ச தங்கியிருந்ததாகக் கூறப்படும் அறையின் அலுமாரியில் இருந்து ஒரு கோடியே எழுபத்து எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கண்டெடுத்தது.

அந்தப் பணத்தை அரச தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் நிசேத பெர்னாண்டோ என்ற அதிகாரியிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக மாணவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு அவர் அந்தத் தொகையை ஏற்க மறுத்ததுடன், தலைமை காவல்துறை பரிசோதகர் சாகர லியனகேவுக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, சாகர லியனகே உள்ளிட்ட காவல்துறை குழுவினர் அங்கு சென்றனர். பணம் கிடைத்த இடத்தை காணொலியாக பதிவு செய்த காவல்துறையினர், ஐந்து மாணவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று பணத்தையும் தமது பொறுப்பில் எடுத்துச் சென்றனர்.

இந்த பணம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இத்தனை நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் திடீரென கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து, காவல்துறை புத்தகத்தில் பதியாமல் அந்தப் பணத்தை காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதனை கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி மறுத்ததாகவும் காவல்துறை உயரதிகாரியான “நான் சொன்னதைச் செய்” என்று அவரை மிரட்டியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த உயர் அதிகாரி அவ்வாறு உரையாடி மிரட்டியுள்ளதாக காவல்துறை குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், காவல்துறை தலைமையகத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் வெளியாட்கள் எவருக்கும் பணத்தை வழங்க வேண்டாம் என்று காவல்துறை தலைமையகத்தில் இருந்து கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...