Newsஅதிரடி உத்தரவுகளை பிறப்பித்த பதில் ஜனாதிபதி ரணில்!

அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த பதில் ஜனாதிபதி ரணில்!

-

ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு’ என்ற விளிப்பு பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், விடுத்த விசேட அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நியமிக்கப்படவுள்ள புதிய ஜனாதிபதிக்கு, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் செய்து தரப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் 2 விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதற்கமைவாக ஜனாதிபதி பயன்படுத்திய ‘அதிமேதகு’ என்ற பதத்திற்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்து ஜனாதிபதி கொடியை இரத்துச் செய்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில், நாட்டையும் மக்களையும் மனதில் கொண்டே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

முதலில் நாட்டை கட்டியெழுப்புவோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வோம். அதன் பிறகு கட்சி அரசியலுக்கு திரும்பலாம்.

ஜனநாயகப் போராட்டங்களை நான் எப்போதும் மதிக்கிறேன். எனினும், போராடுபவர்களும் கிளர்ச்சியாளர்களும் வேறுவேறானவர்கள்.

இந்த இரண்டு பகுதிகளும் நம் நாட்டில் உள்ளன. போராட்டகாரர்கள் தங்கள் செயல்பாடுகளை அமைதியாக தொடரலாம். ஆனால் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அண்மையில் இரண்டு ராணுவ வீரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 24 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இப்போதும் இந்தக் கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி தெரிவில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பையும் பேண, பதில் ஜனாதிபதி என்ற வகையில் நடவடிக்கை எடுப்பேன்.

நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அரசியலமைப்பின்படி செயல்படும் நான் அதற்கு புறம்பாக ஒருபோதும் செயல்படமாட்டேன்.

நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் வழங்குவது கடினம்.

எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என்றார்.

Latest news

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தமைக்கான கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில்,...

ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகள் இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல்...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...