Newsஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

-

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக் களத்தில் இளைய சமூகத்தின் ஈர்ப்பு ஹர்ஷ டி சில்வாவிடம் இருப்பதாகவும் நடுத்தர வர்க்க சமூகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ரணில் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி வழுகாராமவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியதன் பின்னர் பிரதமருக்கான அரசியலமைப்பு விதிகளின்படி பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் புதிய அரச தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் போராட்டம்

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தியுள்ளது. பிணை முறையை மாற்றுவதற்கான வாக்குறுதியை செயல்படுத்துமாறு அவர்கள் விக்டோரியா அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். விக்டோரியாவின் பெண்டிகோவில்...

ரஷ்யாவின் எச்சரிக்கைகளுக்கு நாங்கள் பயப்படவில்லை – பிரதமர் அல்பானீஸ்

ரஷ்ய எச்சரிக்கைகளுக்கு அஞ்சவில்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது. உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் பணியை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள், சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையின் போது நடந்த கொலைகளுடன் தொடர்புடையவை. ஹாங்காங்கிலிருந்து திரும்பிய...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...

ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு வருகையாளர் விசாவில் வந்த பிறகு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...