Newsஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

-

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக் களத்தில் இளைய சமூகத்தின் ஈர்ப்பு ஹர்ஷ டி சில்வாவிடம் இருப்பதாகவும் நடுத்தர வர்க்க சமூகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ரணில் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி வழுகாராமவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியதன் பின்னர் பிரதமருக்கான அரசியலமைப்பு விதிகளின்படி பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் புதிய அரச தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...