Newsஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

-

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக் களத்தில் இளைய சமூகத்தின் ஈர்ப்பு ஹர்ஷ டி சில்வாவிடம் இருப்பதாகவும் நடுத்தர வர்க்க சமூகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ரணில் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி வழுகாராமவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியதன் பின்னர் பிரதமருக்கான அரசியலமைப்பு விதிகளின்படி பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் புதிய அரச தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...