Newsஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்

-

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக் களத்தில் இளைய சமூகத்தின் ஈர்ப்பு ஹர்ஷ டி சில்வாவிடம் இருப்பதாகவும் நடுத்தர வர்க்க சமூகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு ரணில் நல்ல பதிலை அளித்துள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி வழுகாராமவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியதன் பின்னர் பிரதமருக்கான அரசியலமைப்பு விதிகளின்படி பதில் அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் புதிய அரச தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...