Newsகோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

கோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

-

வெளிநாடுகளில் உள்ள இலங்கையை சேர்ந்தோர் அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய பதவி விலகும் வரை இலங்கைக்கு ஒரு டொலர் கூட அனுப்ப மாட்டோம் என்று முன்னர் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதன்படி தற்போது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் நாட்டில் உள்ள தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

Srilankadollarchallenge என முகநூல் பக்கத்தினை உருவாக்கி பணத்தினை அனுப்புமாறு மற்றவர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் அவர்களில் பலர் இலங்கைக்கு டொலர்கள் அனுப்பியதனை உறுதிப்படுத்தும் வகையில் இது தொடர்பான பரிவர்த்தனைகளின் ஒளிப்படங்களை முகநூல் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சிறிலங்காவில் உள்ள வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்புமாறும் மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தற்போது சிறிதளவு பணம் அனுப்புவதாகவும், நாட்டில் அரசியல் சூழல் சுமூகமான பின்னர் உரிய முறையில் பணம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் நடத்திய இளையோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...