Newsகோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

கோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

-

வெளிநாடுகளில் உள்ள இலங்கையை சேர்ந்தோர் அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய பதவி விலகும் வரை இலங்கைக்கு ஒரு டொலர் கூட அனுப்ப மாட்டோம் என்று முன்னர் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதன்படி தற்போது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் நாட்டில் உள்ள தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

Srilankadollarchallenge என முகநூல் பக்கத்தினை உருவாக்கி பணத்தினை அனுப்புமாறு மற்றவர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் அவர்களில் பலர் இலங்கைக்கு டொலர்கள் அனுப்பியதனை உறுதிப்படுத்தும் வகையில் இது தொடர்பான பரிவர்த்தனைகளின் ஒளிப்படங்களை முகநூல் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சிறிலங்காவில் உள்ள வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்புமாறும் மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தற்போது சிறிதளவு பணம் அனுப்புவதாகவும், நாட்டில் அரசியல் சூழல் சுமூகமான பின்னர் உரிய முறையில் பணம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் நடத்திய இளையோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...