Newsகோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

கோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

-

வெளிநாடுகளில் உள்ள இலங்கையை சேர்ந்தோர் அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய பதவி விலகும் வரை இலங்கைக்கு ஒரு டொலர் கூட அனுப்ப மாட்டோம் என்று முன்னர் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதன்படி தற்போது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் நாட்டில் உள்ள தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

Srilankadollarchallenge என முகநூல் பக்கத்தினை உருவாக்கி பணத்தினை அனுப்புமாறு மற்றவர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் அவர்களில் பலர் இலங்கைக்கு டொலர்கள் அனுப்பியதனை உறுதிப்படுத்தும் வகையில் இது தொடர்பான பரிவர்த்தனைகளின் ஒளிப்படங்களை முகநூல் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சிறிலங்காவில் உள்ள வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்புமாறும் மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தற்போது சிறிதளவு பணம் அனுப்புவதாகவும், நாட்டில் அரசியல் சூழல் சுமூகமான பின்னர் உரிய முறையில் பணம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் நடத்திய இளையோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...