Breaking Newsஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500 டொலர் வழங்கப்படும். செப்டம்பர் மாத இறுதிவரை திட்டம் நடப்பிலிருக்கும்.

மாநில, மத்திய அரசாங்கங்கள் இணைந்து அந்த நிதியுதவியை வழங்கும். புதிய BA.4, BA.5 ரக ஒமிக்ரோன் கிருமிகள் அதிவேகமாய்ப் பரவுவதைத் தொடர்ந்து அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளது.

குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில் இவ்வாரம் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம்.

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது இது முதல்முறையாகும். நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest news

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தமைக்கான கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில்,...

ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகள் இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல்...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...