Breaking Newsஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500 டொலர் வழங்கப்படும். செப்டம்பர் மாத இறுதிவரை திட்டம் நடப்பிலிருக்கும்.

மாநில, மத்திய அரசாங்கங்கள் இணைந்து அந்த நிதியுதவியை வழங்கும். புதிய BA.4, BA.5 ரக ஒமிக்ரோன் கிருமிகள் அதிவேகமாய்ப் பரவுவதைத் தொடர்ந்து அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளது.

குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில் இவ்வாரம் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம்.

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது இது முதல்முறையாகும். நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...