Breaking Newsஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500 டொலர் வழங்கப்படும். செப்டம்பர் மாத இறுதிவரை திட்டம் நடப்பிலிருக்கும்.

மாநில, மத்திய அரசாங்கங்கள் இணைந்து அந்த நிதியுதவியை வழங்கும். புதிய BA.4, BA.5 ரக ஒமிக்ரோன் கிருமிகள் அதிவேகமாய்ப் பரவுவதைத் தொடர்ந்து அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளது.

குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில் இவ்வாரம் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம்.

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது இது முதல்முறையாகும். நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest news

புலம்பெயர்ந்தோரை பயமுறுத்தும் அவமானகரமான வார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் – ஜெசிந்தா

விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ஒரு அறிக்கையில், நாட்டிற்கு வாழ்ந்து பங்களிக்கும் மக்களின் நோக்கங்கள் குறித்து பயத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கு வரம்புகள் விதிக்கப்பட...

ஆஸ்திரேலியர்களுக்கு இன்று முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் நாளை ஒரு அரிய இரத்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இன்று அதிகாலை ஆஸ்திரேலியா முழுவதும் முழு சந்திர கிரகணம் தெரியும், அதிகாலை 3:30 மணியளவில்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...