Noticesமரண அறிவித்தல் - திரு கந்தையா பாலசிங்கம்

மரண அறிவித்தல் – திரு கந்தையா பாலசிங்கம்

-

மரண அறிவித்தல் – திரு கந்தையா பாலசிங்கம்

யாழ். கரவெட்டி மேற்கு கரணவாயைப் பிறப்பிடமாகவும், இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,மகாதேவி, காலஞ்சென்ற தேவராயு ஆகியோரின் அன்புச் சகோதரனும், காண்டீபன், துளசி, ஆரபி ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜித்தா, பிரதாப், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சின்மயன், ஆதிரை, அய்நேஷ், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் துவாளி வீதி, இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி: துவாளி வீதி, இமையாணன் மேற்கு உடுப்பிட்டி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: வீடு – குடும்பத்தினர் – Mobile : +94212055850

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...