Noticesமரண அறிவித்தல் - திரு கந்தையா பாலசிங்கம்

மரண அறிவித்தல் – திரு கந்தையா பாலசிங்கம்

-

மரண அறிவித்தல் – திரு கந்தையா பாலசிங்கம்

யாழ். கரவெட்டி மேற்கு கரணவாயைப் பிறப்பிடமாகவும், இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,மகாதேவி, காலஞ்சென்ற தேவராயு ஆகியோரின் அன்புச் சகோதரனும், காண்டீபன், துளசி, ஆரபி ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜித்தா, பிரதாப், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சின்மயன், ஆதிரை, அய்நேஷ், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் துவாளி வீதி, இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி: துவாளி வீதி, இமையாணன் மேற்கு உடுப்பிட்டி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: வீடு – குடும்பத்தினர் – Mobile : +94212055850

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...