Breaking Newsபிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

பிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

-

அனைத்துலக நாணய பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான ஆவணங்களை சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான பல ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் பிரதமராகவும் தற்போது பதில் அரச தலைவராகவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதிலும் அவர்கள் அனைவரின் பதிவுகளையும் பிரதமர் செயலகம் வைத்திருந்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் அலுவலகத்தை கைப்பற்றிய பிறகு கோப்புக்கள் காணாமல் போனதாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கோப்புக்களில் சிறிலங்காவுக்கு தேவையான உதவிகளை பெறுவது தொடர்பாக பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் விசா பிரச்சனை உள்ளவர்களுக்கு அரசு உதவி

உங்கள் ஆஸ்திரேலிய விசா காலாவதியாகப் போகிறது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டால், நீங்கள் குடிவரவு நிலைத் தீர்வு சேவையிலிருந்து (SRSS) உதவி பெறலாம். இந்த சேவை ஆஸ்திரேலியாவில் விசா...

அமெரிக்காவில் அமைதிப் பேரணிக்குப் பிறகு உலகளவில் புத்த மதத்திற்கு அதிக தேவை

புத்த மதம் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கை முறையாகக் காணப்படுகிறது என்றும், அது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமேயான மதமாக மட்டுமல்லாமல், உலகத்துடன் இணக்கமான வாழ்க்கை...

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது டிரம்ப் நியாயமற்ற வரி விதிப்பு

கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்த்த 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...

மெல்பேர்ணில் டாக்சிகள் இரவில் மீட்டர்களைப் பயன்படுத்துவதில்லை என குற்றம்

மெல்பேர்ணில் ஒரு டாக்ஸி ஓட்டுநர் மீட்டரைப் பயன்படுத்த மறுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, நகரின் டாக்ஸி துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...