Breaking Newsபிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

பிரதமரின் அலுவலகத்தில் ஆவணங்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

-

அனைத்துலக நாணய பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான ஆவணங்களை சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான பல ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் பிரதமராகவும் தற்போது பதில் அரச தலைவராகவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதிலும் அவர்கள் அனைவரின் பதிவுகளையும் பிரதமர் செயலகம் வைத்திருந்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் அலுவலகத்தை கைப்பற்றிய பிறகு கோப்புக்கள் காணாமல் போனதாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கோப்புக்களில் சிறிலங்காவுக்கு தேவையான உதவிகளை பெறுவது தொடர்பாக பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...