Newsஅனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

-

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தோரை ஏற்றிச் செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படையினர் தடுத்து நிறுத்தியதனையடுத்து அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் போராட்டக்கார்கள் உதவி கேட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் இன்று வெள்ளிக்கிழமை படைத்தரப்பினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1:30 மணியளவில் நுழைந்த காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினர் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தியோர் மீது கடும் தாக்குதல் நடத்தி பலரை கைது செய்தும் காயப்படுத்தியும் உள்ளனர்.

போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படைத்தரப்பினர் வீதிகளில் தடுத்து நிறுத்தியுள்ளனர்

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படையினரால் தாம் முற்றுகையிடப்பட்ட காட்சியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அனைத்துலக நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி, காயப்பட்ட போராட்டக்காரர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, அனைத்துலக நாட்டு தூதரக அதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

படைத்தரப்பினர் அனுமதி வழங்கியதனையடுத்து, காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...