Newsஅனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

-

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தோரை ஏற்றிச் செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படையினர் தடுத்து நிறுத்தியதனையடுத்து அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் போராட்டக்கார்கள் உதவி கேட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் இன்று வெள்ளிக்கிழமை படைத்தரப்பினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1:30 மணியளவில் நுழைந்த காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினர் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தியோர் மீது கடும் தாக்குதல் நடத்தி பலரை கைது செய்தும் காயப்படுத்தியும் உள்ளனர்.

போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படைத்தரப்பினர் வீதிகளில் தடுத்து நிறுத்தியுள்ளனர்

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படையினரால் தாம் முற்றுகையிடப்பட்ட காட்சியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அனைத்துலக நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி, காயப்பட்ட போராட்டக்காரர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, அனைத்துலக நாட்டு தூதரக அதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

படைத்தரப்பினர் அனுமதி வழங்கியதனையடுத்து, காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...