Newsஅனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

-

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தோரை ஏற்றிச் செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படையினர் தடுத்து நிறுத்தியதனையடுத்து அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் போராட்டக்கார்கள் உதவி கேட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் இன்று வெள்ளிக்கிழமை படைத்தரப்பினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1:30 மணியளவில் நுழைந்த காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினர் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தியோர் மீது கடும் தாக்குதல் நடத்தி பலரை கைது செய்தும் காயப்படுத்தியும் உள்ளனர்.

போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படைத்தரப்பினர் வீதிகளில் தடுத்து நிறுத்தியுள்ளனர்

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படையினரால் தாம் முற்றுகையிடப்பட்ட காட்சியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அனைத்துலக நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி, காயப்பட்ட போராட்டக்காரர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, அனைத்துலக நாட்டு தூதரக அதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

படைத்தரப்பினர் அனுமதி வழங்கியதனையடுத்து, காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தமைக்கான கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில்,...

ஜனவரி 1 முதல் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இ-சிகரெட்டுகள் இறக்குமதிக்கு தடை

அவுஸ்திரேலியாவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் மீதான மத்திய அரசின் கடும் நடவடிக்கையின் முதல்...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம்...

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்து பாதியாக குறைந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய...