Breaking Newsஎனக்கு எதிராக செயற்படுகின்றீர்களா?: இந்தியாவிடம் நேரடியாக கேட்டறிந்த ரணில்

எனக்கு எதிராக செயற்படுகின்றீர்களா?: இந்தியாவிடம் நேரடியாக கேட்டறிந்த ரணில்

-

அரச தலைவர் தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயற்படுகின்றதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

ரணில் மீது இந்தியா கோபத்தில் இருப்பதாகவும், ரணிலால் அவர்களுக்கு பெரிய பிரச்சனை இருப்பதாகவும் அரசியல் களத்தில் ஒரு வதந்தி பரவியது.

இந்த வதந்தி ரணில் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பெரிதும் பாதித்தது.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக சில கடினமான முடிவுகளை எடுக்கும் போது, அந்த முடிவுகளின் பின்னணியில் இந்தியா இருப்பதுதான் பிரதான காரணமாகும். அதன்படி, இந்த வதந்தி தனக்கு பாதகமானது என்பதை ரணில் உடனடியாக உணர்ந்து, அதைச் சரி பார்க்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து எமது புலனாய்வு தகவல்கள் ஊடாக அறிந்திருந்தோம்.

தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறிலங்காவின் நிலைமை குறித்து ஆலோசிக்க இந்தியா ஏற்கனவே அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்த நிலையில், ரணில் முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி, இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரிக்க நடவடிக்கை எடுத்தார்.

ரணிலின் முயற்சிகளை புரிந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவை அழைத்து ரணிலை சந்தித்து கலந்துரையாடுமாறு தெரிவித்தார்.

உடனடியாக இந்திய தூதுவர் ரணிலைச் சந்தித்து சிறிலங்காவின் அரசியல் விவகாரங்களில் இந்திய அரசாங்கம் தலையிடாது என்பதைத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...