Breaking Newsஎனக்கு எதிராக செயற்படுகின்றீர்களா?: இந்தியாவிடம் நேரடியாக கேட்டறிந்த ரணில்

எனக்கு எதிராக செயற்படுகின்றீர்களா?: இந்தியாவிடம் நேரடியாக கேட்டறிந்த ரணில்

-

அரச தலைவர் தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயற்படுகின்றதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

ரணில் மீது இந்தியா கோபத்தில் இருப்பதாகவும், ரணிலால் அவர்களுக்கு பெரிய பிரச்சனை இருப்பதாகவும் அரசியல் களத்தில் ஒரு வதந்தி பரவியது.

இந்த வதந்தி ரணில் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பெரிதும் பாதித்தது.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக சில கடினமான முடிவுகளை எடுக்கும் போது, அந்த முடிவுகளின் பின்னணியில் இந்தியா இருப்பதுதான் பிரதான காரணமாகும். அதன்படி, இந்த வதந்தி தனக்கு பாதகமானது என்பதை ரணில் உடனடியாக உணர்ந்து, அதைச் சரி பார்க்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து எமது புலனாய்வு தகவல்கள் ஊடாக அறிந்திருந்தோம்.

தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறிலங்காவின் நிலைமை குறித்து ஆலோசிக்க இந்தியா ஏற்கனவே அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்த நிலையில், ரணில் முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி, இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரிக்க நடவடிக்கை எடுத்தார்.

ரணிலின் முயற்சிகளை புரிந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவை அழைத்து ரணிலை சந்தித்து கலந்துரையாடுமாறு தெரிவித்தார்.

உடனடியாக இந்திய தூதுவர் ரணிலைச் சந்தித்து சிறிலங்காவின் அரசியல் விவகாரங்களில் இந்திய அரசாங்கம் தலையிடாது என்பதைத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...