Breaking Newsடலசிடம் பேரம் பேசிய நாமல்

டலசிடம் பேரம் பேசிய நாமல்

-

அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்த போது நாமல் தலையிட்டு டலசிடம் அருமையான திட்டமொன்றை முன்வைத்திருந்தார்.

அங்கு, டலசிடம் பேச்சு நடத்திய நாமல், ரணில் நிச்சயம் அரச தலைவராக வருவார் என்றும், அதன் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் பிரதமர் பதவி டல்லசுக்கு வழங்கப்படுமெனவும், பிரதமர் பதவிக்குரிய அதிகாரங்கள் பிரதமருக்கே வழங்கப்படும் எனவும் நாமல் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாமல் கொண்டு வந்த இந்த திட்டத்தில் டலஸ் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிரகாரம், பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரி நாமல் தொலைபேசியில் அழைப்பு விடுக்க தொடங்கினார்.

ஆனால், நாமலின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுக்கு நாமலால் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை.

அதேபோன்று அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடம் முறையிட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...