Breaking Newsடலசிடம் பேரம் பேசிய நாமல்

டலசிடம் பேரம் பேசிய நாமல்

-

அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்த போது நாமல் தலையிட்டு டலசிடம் அருமையான திட்டமொன்றை முன்வைத்திருந்தார்.

அங்கு, டலசிடம் பேச்சு நடத்திய நாமல், ரணில் நிச்சயம் அரச தலைவராக வருவார் என்றும், அதன் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் பிரதமர் பதவி டல்லசுக்கு வழங்கப்படுமெனவும், பிரதமர் பதவிக்குரிய அதிகாரங்கள் பிரதமருக்கே வழங்கப்படும் எனவும் நாமல் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாமல் கொண்டு வந்த இந்த திட்டத்தில் டலஸ் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிரகாரம், பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரி நாமல் தொலைபேசியில் அழைப்பு விடுக்க தொடங்கினார்.

ஆனால், நாமலின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுக்கு நாமலால் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை.

அதேபோன்று அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடம் முறையிட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...