Breaking Newsடலசிடம் பேரம் பேசிய நாமல்

டலசிடம் பேரம் பேசிய நாமல்

-

அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்த போது நாமல் தலையிட்டு டலசிடம் அருமையான திட்டமொன்றை முன்வைத்திருந்தார்.

அங்கு, டலசிடம் பேச்சு நடத்திய நாமல், ரணில் நிச்சயம் அரச தலைவராக வருவார் என்றும், அதன் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் பிரதமர் பதவி டல்லசுக்கு வழங்கப்படுமெனவும், பிரதமர் பதவிக்குரிய அதிகாரங்கள் பிரதமருக்கே வழங்கப்படும் எனவும் நாமல் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாமல் கொண்டு வந்த இந்த திட்டத்தில் டலஸ் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிரகாரம், பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரி நாமல் தொலைபேசியில் அழைப்பு விடுக்க தொடங்கினார்.

ஆனால், நாமலின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுக்கு நாமலால் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை.

அதேபோன்று அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடம் முறையிட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...

பெர்த்தில் உள்ள சீன உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பெர்த்தில் உள்ள ஒரு பிரபலமான சீன உணவகத்தின் சமையலறையில் எரிந்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முந்தைய நாள் உணவகம் மூடப்பட்டபோது, ​​எதிர்பாராத விதமாக...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...