Newsரணிலுக்கு வாழ்த்து கூறிய புட்டின்!

ரணிலுக்கு வாழ்த்து கூறிய புட்டின்!

-

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வாழ்த்துக்களை ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் தூதுவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்துச் செய்தியின் மூலம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா-இலங்கை உறவுகள் எப்பொழுதும் நட்புறவைக் கொண்டவை என்பதை வலியுறுத்தும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், இலங்கை மற்றும் ரஷ்ய மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...