Newsஇலங்கையில் மக்களின் ஆணை இரத்தானதால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அழுத்தம்!

இலங்கையில் மக்களின் ஆணை இரத்தானதால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அழுத்தம்!

-

அரச தலைவர் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் மக்கள் வழங்கிய ஆணை இரத்தாகி விட்டது என்றும் உடனடியாக தேர்தலை நடத்துமாறும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த அரச தலைவர் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி புதிய தேர்தலுக்கு வழி வகை செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான செலவை ஏற்க நிறுவனங்கள் இருக்கின்றன. அதற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும்.

எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமைகளில் ஈடுபடத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றார் அவர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு வாங்குபவர்கள் வீடுகளை வாங்குவதைத் தடை செய்வதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய...

இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார் போப்

ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித திருத்தந்தை பிரான்சிஸ், இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறத் தயாராகி வருகிறார். அதன்படி, போப்பிற்கு மருந்து சிகிச்சையுடன் சுமார் 2...

வீட்டிலிருந்து வேலை செய்யும் முடிவை மாற்றிய அல்பானீஸ்

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் எடுத்த முடிவு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அல்பானீஸ் சமீபத்தில் அரசாங்க அதிகாரிகளை முழுநேரமாக அலுவலகத்தில் பணிபுரியுமாறு தெரிவித்தார். இருப்பினும்,...

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வு வழங்கிய ஒரு நிபுணர்

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதிப் பிரச்சினைக்கு ஒரு அற்புதமான தீர்வை ஒரு சொத்து நிபுணர் கண்டுபிடித்துள்ளார். வீட்டுத் திட்டங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வீட்டு விலைகளை மேலும் உயர்த்த வேண்டும் என்று...

மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நிவாரணம் வழங்கப்படும் – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியர்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு மேலும் கட்டண நிவாரணம் வழங்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். அதன்படி, தற்போது வழங்கப்படும் $300 கட்டணச் சலுகை $450 ஆக...

ஆஸ்திரிய பல்கலைக்கழகங்களுக்கு இனி நிதியளிக்கப் போவதில்லை – டிரம்ப் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் நிதி வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டதால், ஏழு முக்கிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி திட்டங்கள் சீர்குலைந்துள்ளன. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், சிட்னி தொழில்நுட்ப...