Newsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

-

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5 வீதமானோருக்கு நீண்ட காலம் ருசி அல்லது மணம் தெரியவில்லை என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் கூறுகின்றன.

COVID-19 தொற்று தொடங்கிய காலம் முதல், மணம் தெரியாமல் போவது முக்கிய அறிகுறியாக இருந்தது.

ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கிறது? விட்டு விட்டு ஏற்படுகிறதா ? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறியப்படாமல் இருந்தது. அதைக் கண்டறிய, 3,700 நோயாளிகளைக் கொண்டு இதுவரை நடத்தப்பட்ட 18 ஆய்வுகள் ஆராயப்பட்டன.

நோய் ஏற்பட்ட ஆறாவது மாதத்துக்குப் பிறகும், 4 வீதமான நோயாளிகளுக்கு மணங்கள் தெரியவில்லை; 2 வீதமானோருக்கு ருசி தெரியவில்லை என்று BMJ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்தப் புதிய ஆய்வு கூறுகிறது.

இருப்பினும் அவர்கள் முழுமையாக குணமடைந்தவர்களா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆய்வின் முடிவாக நீண்ட காலம் மணம் தெரியாமல் இருப்பவர்கள் 5.6 வீதமானோருக்கு ருசி தெரியாமல் இருப்பவர்கள் 4.4 வீதம் என்று கூறப்பட்டது.

மணத்தை, ருசியை அறிய முடியாத பிரிவினரில் பெண்கள் அதிகமாக இருந்ததையும் ஆய்வு சுட்டியது.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...