Newsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

-

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5 வீதமானோருக்கு நீண்ட காலம் ருசி அல்லது மணம் தெரியவில்லை என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் கூறுகின்றன.

COVID-19 தொற்று தொடங்கிய காலம் முதல், மணம் தெரியாமல் போவது முக்கிய அறிகுறியாக இருந்தது.

ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கிறது? விட்டு விட்டு ஏற்படுகிறதா ? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறியப்படாமல் இருந்தது. அதைக் கண்டறிய, 3,700 நோயாளிகளைக் கொண்டு இதுவரை நடத்தப்பட்ட 18 ஆய்வுகள் ஆராயப்பட்டன.

நோய் ஏற்பட்ட ஆறாவது மாதத்துக்குப் பிறகும், 4 வீதமான நோயாளிகளுக்கு மணங்கள் தெரியவில்லை; 2 வீதமானோருக்கு ருசி தெரியவில்லை என்று BMJ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்தப் புதிய ஆய்வு கூறுகிறது.

இருப்பினும் அவர்கள் முழுமையாக குணமடைந்தவர்களா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆய்வின் முடிவாக நீண்ட காலம் மணம் தெரியாமல் இருப்பவர்கள் 5.6 வீதமானோருக்கு ருசி தெரியாமல் இருப்பவர்கள் 4.4 வீதம் என்று கூறப்பட்டது.

மணத்தை, ருசியை அறிய முடியாத பிரிவினரில் பெண்கள் அதிகமாக இருந்ததையும் ஆய்வு சுட்டியது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...