Newsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

-

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5 வீதமானோருக்கு நீண்ட காலம் ருசி அல்லது மணம் தெரியவில்லை என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் கூறுகின்றன.

COVID-19 தொற்று தொடங்கிய காலம் முதல், மணம் தெரியாமல் போவது முக்கிய அறிகுறியாக இருந்தது.

ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கிறது? விட்டு விட்டு ஏற்படுகிறதா ? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறியப்படாமல் இருந்தது. அதைக் கண்டறிய, 3,700 நோயாளிகளைக் கொண்டு இதுவரை நடத்தப்பட்ட 18 ஆய்வுகள் ஆராயப்பட்டன.

நோய் ஏற்பட்ட ஆறாவது மாதத்துக்குப் பிறகும், 4 வீதமான நோயாளிகளுக்கு மணங்கள் தெரியவில்லை; 2 வீதமானோருக்கு ருசி தெரியவில்லை என்று BMJ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்தப் புதிய ஆய்வு கூறுகிறது.

இருப்பினும் அவர்கள் முழுமையாக குணமடைந்தவர்களா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆய்வின் முடிவாக நீண்ட காலம் மணம் தெரியாமல் இருப்பவர்கள் 5.6 வீதமானோருக்கு ருசி தெரியாமல் இருப்பவர்கள் 4.4 வீதம் என்று கூறப்பட்டது.

மணத்தை, ருசியை அறிய முடியாத பிரிவினரில் பெண்கள் அதிகமாக இருந்ததையும் ஆய்வு சுட்டியது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...