Newsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

-

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5 வீதமானோருக்கு நீண்ட காலம் ருசி அல்லது மணம் தெரியவில்லை என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் கூறுகின்றன.

COVID-19 தொற்று தொடங்கிய காலம் முதல், மணம் தெரியாமல் போவது முக்கிய அறிகுறியாக இருந்தது.

ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கிறது? விட்டு விட்டு ஏற்படுகிறதா ? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டறியப்படாமல் இருந்தது. அதைக் கண்டறிய, 3,700 நோயாளிகளைக் கொண்டு இதுவரை நடத்தப்பட்ட 18 ஆய்வுகள் ஆராயப்பட்டன.

நோய் ஏற்பட்ட ஆறாவது மாதத்துக்குப் பிறகும், 4 வீதமான நோயாளிகளுக்கு மணங்கள் தெரியவில்லை; 2 வீதமானோருக்கு ருசி தெரியவில்லை என்று BMJ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்தப் புதிய ஆய்வு கூறுகிறது.

இருப்பினும் அவர்கள் முழுமையாக குணமடைந்தவர்களா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆய்வின் முடிவாக நீண்ட காலம் மணம் தெரியாமல் இருப்பவர்கள் 5.6 வீதமானோருக்கு ருசி தெரியாமல் இருப்பவர்கள் 4.4 வீதம் என்று கூறப்பட்டது.

மணத்தை, ருசியை அறிய முடியாத பிரிவினரில் பெண்கள் அதிகமாக இருந்ததையும் ஆய்வு சுட்டியது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...