Newsஇலங்கைக்கு உதவ தயாராகும் கமல் ஹாசன்!

இலங்கைக்கு உதவ தயாராகும் கமல் ஹாசன்!

-

நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது கமல் ஹாசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நடிகர் கமல் ஹாசனை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை துணை தூதுவருக்கும் நடிகர் கமல் ஹாசனுக்கும் இடையில் இலங்கையின் சினிமாத்துறை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

திரைப்பட குழுவினர் மற்றும் தியேட்டர் குழுவினருடன் இலங்கைக்கு வருகை தருமாறும் அது இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் எனவும் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரன் நடிகர் கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார்.

தனது நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் இதன்போது கமல் ஹாசன் இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...