News இலங்கைக்கு உதவ தயாராகும் கமல் ஹாசன்!

இலங்கைக்கு உதவ தயாராகும் கமல் ஹாசன்!

-

நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது கமல் ஹாசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நடிகர் கமல் ஹாசனை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை துணை தூதுவருக்கும் நடிகர் கமல் ஹாசனுக்கும் இடையில் இலங்கையின் சினிமாத்துறை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

திரைப்பட குழுவினர் மற்றும் தியேட்டர் குழுவினருடன் இலங்கைக்கு வருகை தருமாறும் அது இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் எனவும் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரன் நடிகர் கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார்.

தனது நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் இதன்போது கமல் ஹாசன் இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.