Breaking Newsரணில் முன் வந்திருக்கும் சவால்..!

ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

-

சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.

சீன இராணுவத்தின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17 வரை முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவால் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் இராஜதந்திர மட்டத்தில் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும் என்று இந்தியா அஞ்சுகிறது..

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கலாமென்பதால் இந்திய பாதுகாப்புத்துறை கடும் விசனமடைந்துள்ளது.

இங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது.ஆனால் சீனாவின் கப்பலை தடுக்க இந்தியாவால் முடியவில்லை..

சீனாவின் கப்பலை தடுத்து நிறுத்துவதா அல்லது அதற்கு அனுமதியளித்து இந்தியாவின் எதிர்ப்பினை சம்பாதிப்பதா என்பது ரணிலின் கைகளில் இருக்கிறது.

ஆனால் , ஜனாதிபதிக்கான தெரிவில் தனக்கு ஆதரவளிக்க வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இந்தியா கேட்டுக்கொண்டதை மனதில் வைத்திருக்கும் ரணில் , அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை கையாள்வாரா அல்லது ‘இதற்கு முன் இருந்த ராஜபக்சக்கள் தான் இதனை அனுமதித்தார்கள் . என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது’ என்று கையை விரித்துவிடுவாரோ தெரியவில்லை..

ஆனால் என் சிற்றறிவில் சில விடயங்களை சொல்கிறேன்..

  • இனி இப்போதைக்கு இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்யாது..
  • இலங்கை மேலும் பல அரசியல் , பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது..

ரணிலுக்கு இனித்தான் சத்தியசோதனை ஆரம்பம்..!

நன்றி – சிவராமசாமி

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...