Breaking Newsரணில் முன் வந்திருக்கும் சவால்..!

ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

-

சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.

சீன இராணுவத்தின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17 வரை முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவால் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் இராஜதந்திர மட்டத்தில் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும் என்று இந்தியா அஞ்சுகிறது..

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கலாமென்பதால் இந்திய பாதுகாப்புத்துறை கடும் விசனமடைந்துள்ளது.

இங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது.ஆனால் சீனாவின் கப்பலை தடுக்க இந்தியாவால் முடியவில்லை..

சீனாவின் கப்பலை தடுத்து நிறுத்துவதா அல்லது அதற்கு அனுமதியளித்து இந்தியாவின் எதிர்ப்பினை சம்பாதிப்பதா என்பது ரணிலின் கைகளில் இருக்கிறது.

ஆனால் , ஜனாதிபதிக்கான தெரிவில் தனக்கு ஆதரவளிக்க வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இந்தியா கேட்டுக்கொண்டதை மனதில் வைத்திருக்கும் ரணில் , அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை கையாள்வாரா அல்லது ‘இதற்கு முன் இருந்த ராஜபக்சக்கள் தான் இதனை அனுமதித்தார்கள் . என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது’ என்று கையை விரித்துவிடுவாரோ தெரியவில்லை..

ஆனால் என் சிற்றறிவில் சில விடயங்களை சொல்கிறேன்..

  • இனி இப்போதைக்கு இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்யாது..
  • இலங்கை மேலும் பல அரசியல் , பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது..

ரணிலுக்கு இனித்தான் சத்தியசோதனை ஆரம்பம்..!

நன்றி – சிவராமசாமி

Latest news

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் நடக்கும் மோசடி

ஆஸ்திரேலியாவின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மிகவும் பொதுவானதாகி வருகிறது. அதனுடன், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரநிலைகளை...

அழிந்துவரும் மூன்று கங்காரு இனங்கள் அடையாளம்

ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அழிந்து வரும் மூன்று வகையான கங்காருக்களை அடையாளம் கண்டுள்ளது. 5 மில்லியன் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்...

நாய்களுக்கும் எளிதான ஒரு சிறப்பு விமான நிறுவனம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று நாய்களுக்காக மட்டுமே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி பார்க் ஏர் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழு

மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆசிரியர் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் தொழில்முறை நடவடிக்கையை அணுகுவதாக கூறுகின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வேலைநிறுத்தப்...

நாய்களுக்கும் எளிதான ஒரு சிறப்பு விமான நிறுவனம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று நாய்களுக்காக மட்டுமே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி பார்க் ஏர் நிறுவனம்...

ஆஸ்திரேலியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குழு

மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆசிரியர் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் அடிப்படையில் தொழில்முறை நடவடிக்கையை அணுகுவதாக கூறுகின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வேலைநிறுத்தப்...