Breaking Newsரணில் முன் வந்திருக்கும் சவால்..!

ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

-

சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.

சீன இராணுவத்தின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17 வரை முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவால் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் இராஜதந்திர மட்டத்தில் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும் என்று இந்தியா அஞ்சுகிறது..

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கலாமென்பதால் இந்திய பாதுகாப்புத்துறை கடும் விசனமடைந்துள்ளது.

இங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது.ஆனால் சீனாவின் கப்பலை தடுக்க இந்தியாவால் முடியவில்லை..

சீனாவின் கப்பலை தடுத்து நிறுத்துவதா அல்லது அதற்கு அனுமதியளித்து இந்தியாவின் எதிர்ப்பினை சம்பாதிப்பதா என்பது ரணிலின் கைகளில் இருக்கிறது.

ஆனால் , ஜனாதிபதிக்கான தெரிவில் தனக்கு ஆதரவளிக்க வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இந்தியா கேட்டுக்கொண்டதை மனதில் வைத்திருக்கும் ரணில் , அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை கையாள்வாரா அல்லது ‘இதற்கு முன் இருந்த ராஜபக்சக்கள் தான் இதனை அனுமதித்தார்கள் . என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது’ என்று கையை விரித்துவிடுவாரோ தெரியவில்லை..

ஆனால் என் சிற்றறிவில் சில விடயங்களை சொல்கிறேன்..

  • இனி இப்போதைக்கு இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்யாது..
  • இலங்கை மேலும் பல அரசியல் , பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது..

ரணிலுக்கு இனித்தான் சத்தியசோதனை ஆரம்பம்..!

நன்றி – சிவராமசாமி

Latest news

மறைந்து போகும் சனி கிரகத்தின் வளையம்

சனியின் சின்னமான வளையங்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சனியின் மேற்பரப்பில் வளையங்களாகத் தோன்றும் தூசித் துகள்கள்...

ஜெசிந்தாவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார். நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

விக்டோரியா பெரும் செல்வத்தை ஈட்டுகிறது – பிரதமர் அல்பானீஸ்

விக்டோரியாவை ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

தனிமையில் வாடும் இளைஞர்களைப் பற்றி மெல்பேர்ணில் இருந்து வெளியாகிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்பேர்ண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவில் 15 முதல் 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் இருப்பதாகக்...