Newsஇலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

-

எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயணப் பை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தனியார் பேருந்து சேவைகள், அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவற்றில் மக்களின் நெரிசலும் அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப் பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிடுவதற்காக சிலர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கின்றனர்.

எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...