Newsஇலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

-

எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயணப் பை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தனியார் பேருந்து சேவைகள், அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவற்றில் மக்களின் நெரிசலும் அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப் பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிடுவதற்காக சிலர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கின்றனர்.

எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Latest news

TikTok-இற்கு $600 மில்லியன் அபராதம் விதிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் TikTok-இற்கு $600 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. TikTok, சீன தொழில்நுட்ப நிறுவனமான Bite Dance-இற்குச் சொந்தமானதாக இருக்கும். ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவை சீனாவிற்கு சட்டவிரோதமாக...

$50,000 மதிப்புள்ள அட்டை திருட்டை விசாரிக்க விக்டோரியா CIDக்கு அனுமதி

$50,000 மதிப்புள்ள Pokémon அட்டைகளைத் திருடிய கும்பல், மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர்களுக்கு எதிராக ஒரு...

வாக்களிக்க கூடியுள்ள லட்சக்கணக்கான மக்கள்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் இப்போது கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கின்றனர். ஆஸ்திரேலியர்களில் பாதி பேர் ஏற்கனவே தங்கள் ஆரம்ப வாக்குகளைப் பதிவு செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாக்காளர் பதிவேட்டில் உள்ள 18.1...

குற்றங்களுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வங்கிகள்

குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கி குழு லிமிடெட் (ANZ) ஆன்லைன் கடவுச்சொற்களை ஒழித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, ANZ வங்கி தனது...

ஆஸ்திரேலியாவில் அச்சத்தில் உள்ள ஓய்வு பெற்றவர்கள்

டொனால்ட் டிரம்பின் கட்டண முடிவு ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களுக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய நிதி இருப்பு 1.9 சதவீதம் குறைந்துள்ளதாக ஓய்வூதிய ஆலோசனை...

மெல்பேர்ணில் குழந்தைகளை கடத்தும் ஒரு மர்ம கும்பல்!

மெல்போர்னில் ஒரு குழந்தையை வெள்ளை வேனில் கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. Parkdale-இல் உள்ள St John Vianney தொடக்கப்பள்ளியில் படிக்கும் ஓரு குழந்தை, நேற்று...