Newsசீன கப்பலால் முட்டி மோதிக்கொள்ளும் இலங்கை - இந்தியா

சீன கப்பலால் முட்டி மோதிக்கொள்ளும் இலங்கை – இந்தியா

-

இந்தியாவின் எதிர்ப்பிற்கு வழிவகுத்த சீன ஆய்வுக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்பட்ட நிலையில் குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அதிகாரிகள் கூறுகின்றனர்.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் யுவான் வாங்-5 கப்பல் ஒகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரத்திற்கு நங்கூரமிடப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தக் கப்பலின் வருகை தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டுள்ள இந்தியா, இலங்கை அதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் கடும் அதிருப்தி நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

Latest news

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு

Bondi பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நேற்று இரவு செனட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் உரிமையாளர்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும்...

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

சிட்னியில் அதிகரித்து வரும் சுறா தாக்குதல்கள்

கடந்த 60 ஆண்டுகளில் சிட்னியில் சுறா தாக்குதல் எதுவும் நடந்ததில்லை, ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுபோன்ற சுறா தாக்குதல்களால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...