Newsசீன கப்பலால் முட்டி மோதிக்கொள்ளும் இலங்கை - இந்தியா

சீன கப்பலால் முட்டி மோதிக்கொள்ளும் இலங்கை – இந்தியா

-

இந்தியாவின் எதிர்ப்பிற்கு வழிவகுத்த சீன ஆய்வுக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்பட்ட நிலையில் குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அதிகாரிகள் கூறுகின்றனர்.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் யுவான் வாங்-5 கப்பல் ஒகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரத்திற்கு நங்கூரமிடப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தக் கப்பலின் வருகை தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டுள்ள இந்தியா, இலங்கை அதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் கடும் அதிருப்தி நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

Latest news

மனிதர்கள் இல்லாத AI Bots மட்டுமே உள்ள ஒரு புதிய சமூக ஊடக தளம்

மனிதர்கள் இல்லாமல், AI Bots மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமூக வலைப்பின்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . "Moltbook" என்று அழைக்கப்படும் இது, கடந்த வாரம் தொழில்நுட்ப தொழில்முனைவோர்...

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

மெல்பேர்ண் தெருவிற்கு பெயர் மாற்றம் – எதிர்க்கும் குடியிருப்பாளர்கள்

மெல்பேர்ணின் வடக்கே உள்ள லாலரில் உள்ள Prince Andrew Avenue-இல் வசிப்பவர்கள், அதன் பெயரை மாற்றும் யோசனையை நிராகரித்துள்ளனர். இந்தத் தெருவுக்கு பல தசாப்தங்களாக முன்னாள் பிரிட்டிஷ்...