Newsசதுரங்கத்தை உலகிற்கு அறிமுகம் செய்ததன் பின்னணி என்ன?

சதுரங்கத்தை உலகிற்கு அறிமுகம் செய்ததன் பின்னணி என்ன?

-

பல வருடங்களாக செஸ் சதுரங்க விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி நம் இந்தியாவை GRAND MASTER 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நம் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து நம் இந்தியாவின்‌ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் நார்வே நாட்டைச் சேர்ந்த “மேக்னஸ் கார்ல்சன்”. பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். உலக சதுரங்க மாஸ்டர்களில் மிகப்பிரபலமான இவர் ஐந்து முறை உலகச் சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும், மூன்றுமுறை அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும் ஐந்துமுறை உலக பிளிட் சதுரங்க வீரராகவும் வலம் வந்தவர்.!

இவ்வளவு பெரிய GRAND MASTER, மறுபடியும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் தமிழக மாணவனால் தோற்கடிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம். அவ்வளவு ஏன் “மேக்னஸ் கார்ல்சன்” கூட அந்த போட்டிக்கு முன்புவரை நினைத்திருக்கமாட்டார். அதுவும் 2022 பிப்ரவரி 22, 2022 மே 20 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற போட்டியில் இரண்டுமுறை மேக்னஸ் கார்ல்சனை வென்ற முதல் இளம் வயதுகொண்ட வீரன் என்ற பெருமையைப் பெற்றான் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா. இவனது இந்த வெற்றி உலக நாடுகளிடம் இந்தியாவின் ஆதிக்க கொடி மறுபடியும் பறக்க காரணமாகிறது…

சதுரங்கத்தை உலகிற்கே கற்றுத்தந்தவர்கள் நாங்கள்தான் என்று கர்வத்தோடு மார்தட்டிச் சொல்வதற்குக் காரணமாகியுள்ளான் பிரக்யானந்தா. இது ஒன்றும் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”. ஏனெனில் அத்தகு மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரன் பிரக்யானந்தா. இவனை நமது மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாள்கின்றன, எந்த அளவுக்கு நிதி உதவிகள், பாராட்டுகள் செய்துள்ளன என்பதை நான் அறியேன். எனினும் இவன் கொண்டாடப் படவேண்டியவன் என்பதில் யாதொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.!

சதுர் + அங்கம் = சதுரங்கம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இந்த விளையாட்டானது போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு போர் விளையாட்டாகும்.! தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் “வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல்லானது இன்றைய சதுரங்கத்தின் சங்ககாலப் பெயராகும். மேலும் “கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய” என்ற அகநானூற்றின் வரிகள் சங்ககாலத்தில் இவ்விளையாட்டு நிலைபெற்றிருந்ததைத் தெளிவாக உணர்த்துகிறது. மேலும் “வல்லுப் பலகை” என்ற பெயர் கலித்தொகையில் வருவதால் பலகை போன்ற அமைப்பு செய்யப்பட்டு அதன்மீது இவ்விளையாட்டை விளையாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது..!

SPAIN நாட்டைச் சேர்ந்த “லூயிஸ் ராமிரேஸ்” என்பவர் (CHESS) சதுரங்கம் எப்படி விளையாட வேண்டும் என்று “Repetition of Love and the Art of Playing Chess” என்ற நூலை எழுதியபோது இந்த விளையாட்டு ஆரம்பித்த இடம் பாரததேசம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை 2019 ஆம் ஆண்டு “குஜராத்தின் லோதல்” பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சதுரங்கப்பலகை சிந்துசமவெளி நாகரிக காலத்தை சேர்ந்து என்று அறிஞர்கள் குறிப்பிடுவதையும், கீழடியில் கிடைத்த சதுரங்க காய்களைக் கொண்டும் இந்த விளையாட்டு குறைந்தபட்சம் இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்பே முக்கியமாக நம் தமிழ் மண்ணில் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்யலாம்.!

சங்கப்புலவன் குன்றம்பூதனார் எழுதிய “வல்லுப்போர் வல்லாய்” என்ற பரிபாடல் வரிகள் முருகனை வல்லாட்டத்தில் சிறந்தவனே என்று புகழ்கிறது. “வல்லு” என்பது போரை மையமாகக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்த வல்லு விளையாட்டுதான் இன்று சதுரங்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. இதுவே கீழடியிலும், சிந்துசமவெளி நாகரிக காலங்களிலும் விளையாடப்பட்டு இவ்விளையாட்டின் பிறப்பிடமாக “பாரதமே” முன் நிற்கிறது.

உலகமே உற்றுநோக்கும் விதமாக 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு மைதானத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்நன்னாளில் உலகம் போற்றும் இவ்விளையாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது “பாரதவாசிகளாகிய” நாம்தான் என்பதில் பெருமைகொள்வோம்.!

Latest news

14-மணிநேர Optus செயலிழப்பிற்கு பண இழப்பீடு வழங்க முடிவு

கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட சேவைத் தோல்வியால் சிரமத்துக்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளதாக Optus Communications...

ஓய்வூதிய பலன் தாமதங்கள் குறித்த செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்த செனட் நகர்ந்துள்ளது. குறிப்பாக பழைய கருணைத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை செலுத்தாதது தொடர்பான புகார்களின்...

9/10 ஆஸ்திரேலியர்கள் பூர்வீக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறுகிறார்கள்

பழங்குடியின மக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 10...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த ஊதிய உயர்வு உள்ள துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பள அதிகரிப்புகளை கொண்ட துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் சம்பளம் 08...