Newsகோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல - சர்வதேச ஊடகத்திடம்...

கோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல – சர்வதேச ஊடகத்திடம் கூறிய ரணில்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சி, காரணமாக நாட்டில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது திரும்பினால், அவரை, வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவர் திரும்பி வருவதற்கான உகந்த நேரம் இதுவென தாம் நம்பவில்லை என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ஏற்கனவே அடிமட்டத்தை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்கிறேன்.

நாம் முடிந்தளவு விரைவாக அதை அடைய முயற்சிக்கிறோம்” என்றும் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கை சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 21 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அடுத்த ஆண்டு மற்றைய மூலங்களிலிருந்து 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற வேண்டும்.

அதேநேரம் இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...