Newsகோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல - சர்வதேச ஊடகத்திடம்...

கோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல – சர்வதேச ஊடகத்திடம் கூறிய ரணில்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சி, காரணமாக நாட்டில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது திரும்பினால், அவரை, வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவர் திரும்பி வருவதற்கான உகந்த நேரம் இதுவென தாம் நம்பவில்லை என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ஏற்கனவே அடிமட்டத்தை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்கிறேன்.

நாம் முடிந்தளவு விரைவாக அதை அடைய முயற்சிக்கிறோம்” என்றும் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கை சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 21 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அடுத்த ஆண்டு மற்றைய மூலங்களிலிருந்து 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற வேண்டும்.

அதேநேரம் இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சமூகத்திற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தர வதிவிடம்

கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளான Tuvalu-இன் முதல் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்ற அரசாங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. Tuvalu மற்றும்...

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...

தேசிய கீதம் தொடர்பாக வடகிழக்கு மாநிலப் பள்ளிகளுக்கான புதிய சட்டம்

வடக்குப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளும் கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கும் புதிய அரசாங்கக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. CLP...

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபலமான இசை விழாவில் மாத்திரை பரிசோதனை

ஆஸ்திரேலியாவில் பிரபலமான இசை விழாவான Laneway விழாவில் முதல் முறையாக மாத்திரை பரிசோதனை (Pill Testing) வசதிகளை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு...

நிபா காரணமாக ஆஸ்திரேலியா மீண்டும் ஊரடங்கு உத்தரவில் சிக்குமா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து நிபா வைரஸ் பரவியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள், கோவிட்-19 தொற்றுநோயை விட...

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...