Breaking Newsபிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு - முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

பிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு – முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

-

பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகின்ற 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் யாழப்பாணத்தை சேர்ந்தவர் முதல் முறையாக கலந்து கொள்ளவுள்ளார்.

22வது பொதுநலவாய விளையாட்டு விழாவின், கூடைப்பந்தாட்ட (3×3) போட்டிக்கான இலங்கை ஆண்கள் அணியில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த யோகானந்தன் சிம்ரோன் இடம்பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் பழைய மாணவரான இவர், பாடசாலை காலங்களில் யாழ் மாவட்டத்தின் நட்சத்திர வீரராக அறியப்பட்டவர்.

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியின் இறுதி 15 பேர் கொண்ட குழாத்தில் சிம்ரோன் இடம்பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மற்றும் மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றில் சிம்ரோன் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.

இலங்கை கூடைப்பந்து அணியின் முன்கள வீரராக திகழும் யோகானந்தன் சிம்ரோன், பொதுநலவாய போட்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொள்ளும் முதலாவது கூடைப்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சிம்ரோனின் இந்த வெற்றி பயணத்திற்கு பங்காற்றிய பயிற்சியாளர் திரு ஜெயபாலன் ஜெசிந்தனுக்கும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்திற்கும், யாழ்ப்பாண வீரனுக்கும், கூடைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய போட்டிகளுக்கான 165 வீரர்களை கொண்ட குழாமுக்கும் மக்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...