Breaking Newsபிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு - முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

பிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு – முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

-

பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகின்ற 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் யாழப்பாணத்தை சேர்ந்தவர் முதல் முறையாக கலந்து கொள்ளவுள்ளார்.

22வது பொதுநலவாய விளையாட்டு விழாவின், கூடைப்பந்தாட்ட (3×3) போட்டிக்கான இலங்கை ஆண்கள் அணியில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த யோகானந்தன் சிம்ரோன் இடம்பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் பழைய மாணவரான இவர், பாடசாலை காலங்களில் யாழ் மாவட்டத்தின் நட்சத்திர வீரராக அறியப்பட்டவர்.

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியின் இறுதி 15 பேர் கொண்ட குழாத்தில் சிம்ரோன் இடம்பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மற்றும் மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றில் சிம்ரோன் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.

இலங்கை கூடைப்பந்து அணியின் முன்கள வீரராக திகழும் யோகானந்தன் சிம்ரோன், பொதுநலவாய போட்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொள்ளும் முதலாவது கூடைப்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சிம்ரோனின் இந்த வெற்றி பயணத்திற்கு பங்காற்றிய பயிற்சியாளர் திரு ஜெயபாலன் ஜெசிந்தனுக்கும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்திற்கும், யாழ்ப்பாண வீரனுக்கும், கூடைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய போட்டிகளுக்கான 165 வீரர்களை கொண்ட குழாமுக்கும் மக்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...