Breaking Newsபிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு - முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

பிரித்தானியாவில் பொதுநலவாய விளையாட்டு – முதன்முறையாக கலந்து கொள்ளும் யாழ் வீரர்

-

பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகின்ற 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் யாழப்பாணத்தை சேர்ந்தவர் முதல் முறையாக கலந்து கொள்ளவுள்ளார்.

22வது பொதுநலவாய விளையாட்டு விழாவின், கூடைப்பந்தாட்ட (3×3) போட்டிக்கான இலங்கை ஆண்கள் அணியில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த யோகானந்தன் சிம்ரோன் இடம்பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் பழைய மாணவரான இவர், பாடசாலை காலங்களில் யாழ் மாவட்டத்தின் நட்சத்திர வீரராக அறியப்பட்டவர்.

தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேசிய கூடைப்பந்து அணியின் இறுதி 15 பேர் கொண்ட குழாத்தில் சிம்ரோன் இடம்பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மற்றும் மலேஷியாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றில் சிம்ரோன் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.

இலங்கை கூடைப்பந்து அணியின் முன்கள வீரராக திகழும் யோகானந்தன் சிம்ரோன், பொதுநலவாய போட்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொள்ளும் முதலாவது கூடைப்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சிம்ரோனின் இந்த வெற்றி பயணத்திற்கு பங்காற்றிய பயிற்சியாளர் திரு ஜெயபாலன் ஜெசிந்தனுக்கும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்திற்கும், யாழ்ப்பாண வீரனுக்கும், கூடைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய போட்டிகளுக்கான 165 வீரர்களை கொண்ட குழாமுக்கும் மக்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Latest news

2063ல் நாட்டின் முதியோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படும்

மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் வடிவத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு தலைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2063 ஆம் ஆண்டளவில், இலங்கையில்...

NDIS அமைப்பிலிருந்து விலக்கப்படும் செரிமானக் கோளாறுகள் உள்ள குழந்தைகள்

இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை NDIS அமைப்பிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட...

AUKUS ஒப்பந்தத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான திட்டங்கள்

AUKUS ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான புதுமை மற்றும் செலவுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முத்தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா...

ஆஸ்திரேலிய எல்லைப் படைகளின் பிடியில் இருந்து அகதிகள் படகு ஒன்று தப்பியது

அவுஸ்திரேலிய கடற்படை எல்லைப் படையில் இருந்து 12 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மேற்கு...

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களை ஆய்வு செய்த...

இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்!

சம்பள தகராறு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான விக்டோரியா காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் விக்டோரியா பொலிஸ்...