Newsஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்

-

சாதாரண பஸ் கட்டணம் இன்று (04) நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவிலிருந்து 34 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

பஸ் கட்டண குறைப்பிற்கு போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

COVID காலப்பகுதியில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டமையால், 20% பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது வழமை போல் அதிகளவான பயணிகள் ஏற்றிச்செல்லப்படுவதால், சாதாரண பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை ஆராய்ந்து, உள்ளக மற்றும் வௌி மாவட்டங்களுக்கான சாதாரண பஸ் போக்குவரத்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா சுட்டிக்காட்டினார்.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...