Newsஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்

-

சாதாரண பஸ் கட்டணம் இன்று (04) நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவிலிருந்து 34 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

பஸ் கட்டண குறைப்பிற்கு போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

COVID காலப்பகுதியில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டமையால், 20% பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது வழமை போல் அதிகளவான பயணிகள் ஏற்றிச்செல்லப்படுவதால், சாதாரண பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை ஆராய்ந்து, உள்ளக மற்றும் வௌி மாவட்டங்களுக்கான சாதாரண பஸ் போக்குவரத்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா சுட்டிக்காட்டினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...