Newsஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் - விசாரணையில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் – விசாரணையில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்ரா (24) , அமால் (23) சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

ஜூன் மாதம் 7ஆம் திகதி இறந்த அவர்களின் மரணத்துக்கு காரணம் தெரியாமல் சிட்னி பொலிஸார் தவித்து வந்தனர்.

அந்தச் சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு அவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிய முயற்சித்தனர். இரு மாதங்களுக்கு மேலாக அந்தச் சகோதரிகள் மரணத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அவர்களின் மரணத்தில் சிறிய துப்பு ஒன்று பொலிஸாருக்கு தற்போது கிடைத்துள்ளது.

புதுமைப் பாலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், அந்தச் சகோதரிகள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் நடந்த புதுமைப் பாலினத்தவர் நிகழ்வில் கண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

பொலிஸாரிடம் அந்தப் பெண் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சகோதரிகள் இருவரும் தனியாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தயக்கம் இருந்தது. நான் அவர்களிடம் சென்று பேசியபோது அவர்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். சவுதியில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று என்னிடம் கூறினார்கள். நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் ஒரு வார்த்தையில்தான் பதிலளித்தார்கள். அவர்கள் சிட்னி வந்த பிறகுதான் சுதந்திரத்தை உணர்வதாக தெரிவித்தார்கள். சிட்னியில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க இருப்பதாக தெரிவித்தார்கள். அந்தச் சகோதரிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்றார்.

தங்களது பாலினம் சார்ந்த அச்சத்தில் சகோதரிகள் இருவரும் தங்கள் தாய்நாடான சவுதியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியுள்ளனர். இந்தச் சூழலில் தங்கள் பாலினம் குறித்த அச்சத்தில் தங்களை மாய்த்துக் கொண்டனரா என்ற கோணத்திலும் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தச் சகோதரிகளின் மரணம் குறித்து சவுதி மனித உரிமை ஆணையம் கூறும்போது, “குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் சவுதி பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

Latest news

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

அவசரமாக திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தை தயாரிப்புக்கள்

கண்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பிரபலமான Bunjie Probiotic Baby Eye Wipes-ஐ அவசரமாக திரும்ப பெற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர்...

அவசரமாக திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தை தயாரிப்புக்கள்

கண்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பிரபலமான Bunjie Probiotic Baby Eye Wipes-ஐ அவசரமாக திரும்ப பெற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர்...

மெல்பேர்ண் போராட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்கள்

மெல்பேர்ண் நகர மையத்தில் நடந்த போராட்டங்களை அடக்க போலீசார் தலையிட்டுள்ளனர். மெல்பேர்ண் CBD-யில் ஒன்றுகூடவிருந்த இரண்டு எதிரெதிர் குழுக்களை போலீசார் பிரித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாரிய போராட்டங்களுக்காக வீதிகளில்...