Newsஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் - விசாரணையில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் – விசாரணையில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்ரா (24) , அமால் (23) சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

ஜூன் மாதம் 7ஆம் திகதி இறந்த அவர்களின் மரணத்துக்கு காரணம் தெரியாமல் சிட்னி பொலிஸார் தவித்து வந்தனர்.

அந்தச் சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு அவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிய முயற்சித்தனர். இரு மாதங்களுக்கு மேலாக அந்தச் சகோதரிகள் மரணத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அவர்களின் மரணத்தில் சிறிய துப்பு ஒன்று பொலிஸாருக்கு தற்போது கிடைத்துள்ளது.

புதுமைப் பாலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், அந்தச் சகோதரிகள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் நடந்த புதுமைப் பாலினத்தவர் நிகழ்வில் கண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

பொலிஸாரிடம் அந்தப் பெண் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சகோதரிகள் இருவரும் தனியாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தயக்கம் இருந்தது. நான் அவர்களிடம் சென்று பேசியபோது அவர்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். சவுதியில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று என்னிடம் கூறினார்கள். நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் ஒரு வார்த்தையில்தான் பதிலளித்தார்கள். அவர்கள் சிட்னி வந்த பிறகுதான் சுதந்திரத்தை உணர்வதாக தெரிவித்தார்கள். சிட்னியில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க இருப்பதாக தெரிவித்தார்கள். அந்தச் சகோதரிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்றார்.

தங்களது பாலினம் சார்ந்த அச்சத்தில் சகோதரிகள் இருவரும் தங்கள் தாய்நாடான சவுதியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியுள்ளனர். இந்தச் சூழலில் தங்கள் பாலினம் குறித்த அச்சத்தில் தங்களை மாய்த்துக் கொண்டனரா என்ற கோணத்திலும் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தச் சகோதரிகளின் மரணம் குறித்து சவுதி மனித உரிமை ஆணையம் கூறும்போது, “குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் சவுதி பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் குழந்தை பராமரிப்புத் துறை

பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...

சாலை விதிகளில் ஏற்படும் பெரிய மாற்றங்களுக்கு ஓட்டுநர்கள் தயாரா?

2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள், ஓட்டுநர் பயிற்சியின் புதிய...

விக்டோரியாவின் AI சட்டம் உங்களை ஏன் என்று யோசிக்க வைக்கிறது?

நீதிமன்ற ஆவணங்களை வரைவதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு விக்டோரியன் சட்ட சேவைகள் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. AI தவறான வழக்கு மேற்கோள்களை...

வேலைகள் மற்றும் தாய்மையைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா பல வசதிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கான வேலைப் பாதுகாப்பு மற்றும் விடுப்பு உரிமைகள் குறித்து நியாயமான பணி குறைதீர்ப்பாளன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய வேலைவாய்ப்பு தரநிலைகளின்படி, கர்ப்ப காலத்தில் ஊதியம்...

MATES விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் MATES விசாவிற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமக்கள் முதலில் வாக்களிக்கப் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Mobility Arrangement for Talented Early-professionals...